Tuesday, November 9, 2010

தலைவர் பிரபாரகன் தலமையில் 12 ஆயிரம் போராளிகள் வெளிநாட்டில்... : குழப்பத்தை ஏற்படுத்தும் இந்திய ஊடகங்கள்

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தலமையில் வெளிநாடொன்றில் 12 ஆயிரம் போராளிகள் பயிற்சி பெற்றுவருவதாகவும் வெகுவிரைவில் தலைவர் அவர்களின் வருகையை எதிர்பார்க்கலாம் என்றும் தமிழ் நாட்டில் உள்ள சில பத்திரிக்கைகள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான செய்திகளை வெளியிட்டு பரபரப்பாக்கியுள்ளனர்.


தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தலமையில் வெகு விரைவில் ஈழம் மீட்கும் போர் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதற்காக ஆயுதங்கள் வாங்குவதற்காக புலிகளின் அனைத்துலக செயற்பாட்டாளர்கள் பணம் சேர்க்க ஆரம்பித்துள்ளதாகவும் அந்தப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
தற்போது புலம்பெயர் தேசங்களில் புலிகள் அடுத்தகட்ட யுத்தத்தை ஆரம்பிப்பதற்காக பணம் சேர்க்கும் முயற்சியில் முன்முரமாக ஈடுபட்டுள்ளதாக அப்பட்டமான பொய்யை செய்தியாக வெளியிட்டு குறுகிய சில மணி நேரத்துக்குள் பல லச்சம் பத்திரிக்கைகளை விற்று பணமாக்கியுள்ளனர்.

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு பலராலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அதை தடுக்கும் விதமாகவும் புலிகள் போரை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அது இந்திய நாட்டுக்கு ஆபத்தாக முடியும் என்றும் செய்திகளை இந்திய புலனாய்வு அமைப்பான றோவின் வேண்டுதளுக்கிணங்க வெளியிட்டுள்ளனர்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் விழுத்துவது போல் குறிப்பிட்ட செய்தி றோவால் இரண்டு முக்கிய விடயங்களை குறிவைத்து தமிழ் நாட்டு பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒன்று புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீடிப்பது.

இரண்டாவதாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இந்த மாவீரர் நாள் அன்று மக்கள் முன் தோன்றுவார் என்ற செய்தியையும் பரப்பி தலைவரின் வருகையை எதிர்பார்த்து தவமாக தவமிருக்கும் ஆதரவாளர்களை சலிப்படைய வைப்பதே இவர்களின் நோக்கமாகவுள்ளதாக கருத முடிகின்றது.

தமிழீழ தனி நாட்டை விரும்பும் தமிழ் நாட்டு ஈழ ஆதரவான மக்களே! பத்திரிக்கைகளை விற்பதற்காகவும் றோவிடம் பணம் வாங்கியும் சில பத்திரிக்கைகள் இவ்வாறான உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்புவதே இவர்களின் முழு நோக்கம், எனவே இவ்வாறான செய்திகளை படித்து குழப்பமடையாமல் தெளிவாக இருங்கள்.

Tuesday, September 7, 2010

Difference between LTTE and Government

A fine difference between SL Government and LTTE Government

Sri Lanka is still denying civilian deaths

Peter Bouckaert guardian.co.uk, Sunday 5 September 2010 16.59 BST Article historyDuring the Vietnam conflict, the US military developed some creative ways to increase the numbers of Viet Cong insurgents it claimed to have killed. "If they're dead, they're Viet Cong," meant that any Vietnamese killed by American soldiers would automatically count as enemy fighters.
Sri Lanka's defence secretary, Gotabhaya Rajapaksa, has taken such creative accounting to new heights. The United Nations reported that at least 7,000 civilians were killed and tens of thousands wounded during the final months of the brutal conflict with the Liberation Tigers of Tamil Eelam, which ended in May 2009. But Gotabhaya has repeatedly cast aspersions on the idea that there were any civilian casualties.
In his recent statement before a Sri Lankan commission looking at lessons learned from the war, Gotabhaya claimed that injured Tigers "changed their uniforms into civilian clothes" and that the Tigers must have suffered at least 6,000 dead and 30,000 injured – suggesting those counted as civilian casualties were really just Tamil Tiger fighters who had shed their uniforms.
As for the widespread war crimes and human rights abuses by both sides reported both during and after the conflict by various UN agencies, the US state department and human rights organisations, the defence secretary seems to be suffering from severe amnesia. He told the Lessons Learned Commission: "No complaints about human rights violations or abuses by the army were brought to my notice. None at all."

Despite the promises made by President Mahinda Rajapaksa to UN secretary general Ban Ki-moon in June 2009 to investigate wartime atrocities, as well as Sri Lanka's international legal obligations to investigate alleged laws of war violations, the president and his brothers in power have not lifted a finger to do so. The president often appears stunned when other governments both praise the government's victory yet insist on accountability for laws of war violations.

Gotabhaya also proclaimed that the military operation was a really a "humanitarian intervention" in which "we took great care to avoid [endangering] civilians … our military had to stop operations and give protection to people, food convoys." In practice, however, rather than protecting civilians, the government blocked access by humanitarian organisations. The International Committee of the Red Cross complained publicly that it was unable to reach those most in need.

There are genuine concerns that the Lessons Learned Commission will serve only to whitewash allegations of serious abuses, and that its conclusions will be used to brush off calls for an international investigation. The panel's mandate is deliberately limited: its main responsibility is to understand the reasons for the collapse of the 2002 ceasefire agreement, and there is no express mandate to investigate laws of war violations.

The government clearly wants to avoid an honest attempt to find the truth. During a BBC interview in June, Gotabhaya threatened to have the commander behind the final military offensive, Gen Sarath Fonseka, executed after he promised to co-operate with investigations into wartime violations. The government took Fonseka – who earlier this year unsuccessfully ran against the president – to court martial, where he was convicted, essentially cutting him off from any capacity to challenge the Rajapaksa version of events.

The government announced in June that it will deny visas to the members of a UN expert panel established to advise Secretary General Ban on mechanisms for accountability. For those who didn't get the message, protests against the panel led by a government minister outside the UN compound in Colombo should have: this government has no interest in investigating abuses and providing victims a measure of justice.

Add to this the continued suppression of government critics, civil society, and media, the restricted access for independent monitors to the northern and eastern parts of the country where the fighting occurred, the lack of information about an estimated 8,000 suspected Tamil Tiger fighters currently detained in "rehabilitation camps," and the conditions are ripe for a complete rewrite of history.

What the Lessons Learned Commission makes of the testimony it receives remains to be seen. One would hope that it would see the government's version of events for what it is: a cynical fabrication designed to avoid scrutiny. Unfortunately, there is every reason to fear that the panel will believe the story that is being spun by the Rajapaksa brothers, which basically runs to the formula from Lewis Carroll's Alice in Wonderland: "Nothing would be what it is because everything would be what it isn't."

Thursday, July 1, 2010

Tigers lurk in the shadows after 14 months of peace

There is every sign of the victorious military, BUT the LTTE remains in quiet corners after 14 months of peace

Elephant Pass: The military checkpoint here is sponsored by the Colonial Group, pipe and steel manufacturers based in Colombo. It's a well-built structure allowing soldiers to stand guard behind sandbags, neatly felled palm tree trunks and some steel railings.
A soldier with a whistle stops traffic on the A9 allowing visitors to cross the road.

Elephant Pass, 2.5 metres above sea level, as the sign on the A9 says, is now a tourist attraction.

Brightly painted Lanka Ashok Leyland buses are parked on a gravel parking lot which is replete with corrugated steel latrines for men and women. The latrines, however, are not sponsored by the Colonial Group of Colombo.

Sixteen months ago, this stretch of highway, a vital junction between north and south, and at a vital crossroads on the Jaffna Peninsula, was the scene of a bloody battle between LTTE forces and Sri Lankan army forces.

In May, President Mahinda Rajapakse unveiled a large monument here to commemorate that struggle. These words are carved into granite plinths at the base of the monument:

"Place where enormous strength, force, power and determination concentrated from four directions."

It continues: "With the objective of engarlanding the reconciled persons, the valiant, heroic and valorous troops of the 57th and 58th Divisions approached diligently, courageously with might and main and without a wink of sleep from the Southern direction and tranversed scrubs, impassable moats, quagmires and demolishing dreadful traps and the troops of the 53rd and 56th Divisions advanced from the Northern Direction, converged on this historical place of Elephant Pass and liberated the long path of brotherhood with a magnitude of force annihilating terrorism and social disparities on the 10th January 2009."

‘Important time'

It's also repeated in Sinhalese and Tamil, just in case there's any doubt.

For the majority of his 50 years, Bluda Awickermansanghe has lived with violence and war. A manager at a garment factory in Jaffna, Awickermansanghe is using this Friday afternoon holiday as an opportunity to visit the war memorials here and at nearby Kilinochchi and pay tribute to all who died in 37 years of civil war.

"It's an important time for us all now in Sri Lanka," he says, looking out over the flat landscape and joining roads from the new memorial raised 50 metres above the army checkpoint.

"We have all endured so much suffering from all sides and we have to learn to work together and rebuild Sri Lanka. It has great potential for tourism up here in Jaffna but now there is nothing — only landmines. You are the first foreigner visitor I have met in Jaffna in years," he tells me.

He also looks at his 20-year-old daughter, Tajan.

"I never want her to have to live what we have lived through. Thankfully the government managed to defeat the LTTE and now that is behind us. We must look to the future but we must never forget the terrible war we all suffered through."

Little Sanduni, 11, a friend's daughter, also accompanies them on this pilgrimage.

"She is our hope for the future," Awickermansanghe says.

On one side of the road, the hulk of a rusting armoured bulldozer sits on a plinth, flower garlands hanging off twisted wire and gaping blast holes. A plaque marks that a young Sri Lankan soldier was posthumously awarded with a medal of honour for stopping the LTTE bulldozer at it tried to take an army bunker. On the other side of the road, behind the army checkpoint sponsored by the Colonial Group of Colombo, a topless Prado sits on bricks, its bodywork riddled with bullet holes. This was Prabhakaran's car, and some senior LTTE leaders were killed in it as they tried to flee the battle here at Elephant Pass.

At Kilinochchi, flattened buildings hem the A9. A 20-metre wide and 100-metre tall concrete tower lies toppled in a twisted mess of rusting rebar and rocks. A platoon of young soldiers clamber into a tractor-drawn trailer, balancing awkwardly as it fires into life and pulls away.

After 14 months of peace, there is little sign of reconstruction in this small city that was the headquarters of the LTTE for nearly 20 years.

Instead, newly constructed sandbag emplacements are located every 100 metres down the main street, soldiers and armed police patrol the shops and stalls that are hawking vegetables, coconuts and dried fish and shrimp.

Every vehicle passing north to Jaffna or south to Maankulam on the A9 are stopped, identities checked, contents searched.

The only new construction visible so far as a peace dividend for the people of Kilinochchi is another new war memorial, opened by President Mahinda Rajapaske in May. It's a huge grey-painted concrete cube with a large crack running through it, dissected by a protruding brass shell. On top, a bronze lotus moves awkwardly in the wind. The monument is supposed to symbolise the struggle of all Sri Lankans in overcoming the LTTE terrorists. I can't help but think that with the size of the crack running through the concrete cube, it represents an island forever divided.

Further up the A9 near Chavakachcheri, the electricity company is planning to replace the concrete pylons along the road. The original ones are long since gone, blown up, knocked down, out of commission. The company has left the new concrete poles every 20 metres by the side of the road, waiting to be erected. The poles, however, won't be going up anytime soon, not until the land mines are gone.

All along this road, for kilometres on end, yellow tape is strung, written in Sinhalese, Tamil and English warning: MINES! More ominous red signs with skull and crossbones also warn of the landmine danger.

I watch one young soldier move back gingerly from behind the yellow tape to the cleared roadside, wrestling with a large blast-proof shield as he does so. He pulls off a mask ever so much like that worn by a welder, only more Perspex than metal. He is covered in sweat — nerves not humidity. He sits and draws out a cigarette, a nicotine break well deserved.

It will be years before these paddy fields and palm groves are safe to use.

Demining programmes active on the Jaffna peninsula estimate that there are still some 25,000 antipersonnel mines to be located in this thin neck of land. Since they started demining programmes in earnest last year, the casualty rate has fallen to single digits per month.

Scrap metal recycling along this A9 is a risky business — the Sri Lankan army has organised one drop-off point. Mortar shell casings are in one pile, artillery shell casings in another, a third for bits of assorted shrapnel such as spent RPG rounds and rocket parts.

For all of this landscape scarred by nearly decades, there is every sign of the victor and none of the vanquished.

Every 150 metres along the A9, soldiers stand guard, with every village or town being home to a different battalion or detachment, welfare stores and rest stops being run by the military.

In Jaffna, a pokey and dirty bar sells beer in big bottles, cigarettes are stubbed underfoot, glasses are swirled in basins and arrak flows freely.

If you want to find LTTE fighters, this would be as good a place as any to start the hunt.

A wide-eyed off-duty police officer slurs his words; a driver hustles for fares, a jeweller smokes cigarettes too close to his yellowing fingers while a tall, quiet man with a steely stare listens a lot and says little.

I explain where I'm from, make small talk about different parts of the world, and try to explain what has taken me to this place where few foreigners venture.

"The LTTE are still here?" I ask quietly, out of earshot of the now drowsy and dosing off-duty policeman.

"Yes," the tall quiet one with the steely stare says. "We are. This is our home."

Source : http://gulfnews.com

Monday, June 14, 2010

SLA engaged in obliterating evidence of mass killings in Vanni

Sri Lanka Army (SLA) soldiers are hastily destroying hundreds of human skeletal remains that lies in the weed overgrown bunkers where the Vanni civilians had crept into to save their lives when SLA moved into Vanni in its final offensives on Vanni, a representative of an International NGO who recently visited places not permitted for resettlement in Vanni told TamilNet. Meanwhile, a priest, an eyewitness to the massacre, recalled how the advancing SLA soldiers had thrown grenades into the bunkers and how SLA tanks had dumped them with earth even with people alive in them.

The NGO official who recently visited areas from Puthukkudiyiruppu to Puthu Maaththa’lan where the people of Vanni were driven into during the last phase of the war added that human skeletal remains are visible in the former bunkers as torrential rain had washed away the upper layers of earth.

He added that he saw SLA soldiers hastily trying to obliterate all such evidence of the thousands of Vanni civilians killed indiscriminately in the very bunkers they had sought safety to their lives.
The priest recalled how the advancing SLA troops into Mu’l’livaaikkaal on 18 and 19 May 2009 had fired rocket launchers and lobbed grenades into the bunkers where thousands of civilians with their families had desperately tried to stay alive.

The SLA soldiers, on orders from their superiors, are actively destroying whatever evidence of the massacre of Vanni that remains in the places where resettlement is yet to be permitted.
 
Source : http://www.tamilnet.com/

Wednesday, June 9, 2010

விடுதலைப் புலிகள் மீதான தடைகளின் பரிமாணங்களும், அதனை நீக்கவேண்டிய அவசியமும் -நிராஜ் டேவிட்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை கடந்த 14.05.2010 திகதி இந்தியா மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடித்துள்ளது. அதுமட்டுமல்ல, விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு சட்டவிரோத அமைப்பாகவும் இந்தியா அறிவித்துள்ளது. 1992ம் ஆண்டு முதல் இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்.....

...கீழ் (Unlawful Activities Prevention Act ) விடுதலைப் புலிகள் மீதான தடை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. விடுதலைப்புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாகக் கூறி, விடுதலைப் புலிகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் மீது தனது கடுமையான சட்டத்தை ஏவியும் வருகின்றது இந்தியா.

விடுதலைப்புலிகள் மீதான இந்தியாவின் இந்தத் தடை காரணமாக விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நேரடியாக ஏற்பட்டு வருகின்ற பாதிப்புக்கள் ஒரு புறம் இருக்க, ஈழத் தமிழர்களின் நன்மைகள் இந்தத் தடையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன என்பதுதான் உண்மை.

முதலாவதாக இலங்கை இராணுவத்தின் திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் இருந்தும், வெள்ளை வான் வேட்டைகளில் இருந்தும், முட்கம்பிக் கொலைக் களங்களில் இருந்தும் தப்பி ஈழத் தமிழர்கள் தமிழ் நாட்டிற்கு தஞ்சம் தேடி வரும் வழிகளை இந்தியாவின் இந்தத் தடை இரும்புச் சுவர் கொண்டு அடைத்து நிற்கின்றது.

அடுத்ததாக, விடுதலைப்புலிகள் மீது நீடிக்கப்பட்டுள்ள இந்த தடையானது, குறைந்தது அடுத்த இரண்டு வருடங்களுக்காவது ஈழத்தமிழர் தமது அரசியல் நகர்வுகளை தமிழ்நாட்டை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளமுடியாது என்பதை திட்டவட்டமாக அறிவித்து நிற்கின்றது.



அத்தோடு, விடுதலைப்புலிகள் மீதான இந்த தடையை அடிப்படையாக வைத்து, ஈழத் தமிழர்களுக்குச் சார்பாகச் செயற்படும் அல்லது செயற்பட நினைக்கின்ற தமிழ் நாட்டு அரசியல் சக்திகளின் கரங்களையும் முடக்கிப் போடுவதற்கு இந்தியாவின் ஆளும் வர்க்கத்திற்கு அளவற்ற அதிகாரங்களையும் கொடுத்து நிற்கின்றது.

இன்று ஈழத்தமிழரைப் பொறுத்தவரையில் அவர்கள் தங்கள் சொந்த மண்ணில் இருந்து முற்றாகவே விரட்டியடிக்கப்பட்ட நிலையில், எஞ்சி இருப்பவர்கள் அடிமைச் சீவியம் நடத்த நிர்ப்பந்திக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களது எதிர்கால அரசியல் நகர்வென்பது தமிழ் நாட்டிலோ அல்லது புலம்பெயர் நாடுகளிலோதான் மேற்கொள்ளப்படவேண்டி இருக்கின்றது.

இந்தியாவில் புலிகள் மீதான இந்தத் தடை நீடிப்புக் காரணமாக தமிழ் நாட்டை அடிப்படையாகக் கொண்ட ஈழத் தமிழர்களின் அரசியல் நகர்வுகள் ஓரளவு முடக்கப்பட்ட நிலையில், புலம்பெயர் நாடுகளிலேயே ஈழத் தமிழர்களின் எதிர்கால அரசியல் நகர்வுகள் காத்திரமாக முன்நகர்த்தப்படவேண்டிய தேவை இருக்கின்றது.

தமிழர்தான் புலிகள்.. புலிகள்தாம் தமிழர்கள் என்னும் கோஷம் கடந்த ஒரு தசாப்த காலமாக தமிழ் தேசியவாதிகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. பெரும்பாலான ஈழத் தமிழர்களும் நாங்களே விடுதலைப்புலிகள்.. புலிகள் எனப்படுபவர்கள் நாங்கள்தாம் .. என்று கூறிக்கொள்வதில் பெருமையும் அடைந்து கொள்கின்றார்கள்.

ஈழத் தமிழர்களின் கடந்த 30 வருட கால உழைப்புக்கள், கனவுகள், தியாகங்கள் என்பன விடுதலைப்புலிகள் என்ற அமைப்பின் மீதுதான் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. சாதாரணமாகவே எதற்கும் கணக்குப் பார்த்து, பிரதிபலன் எதிர்பார்த்து முதலிடுகின்ற வழக்கத்தை தமதாகக் கொண்ட ஈழத் தமிழ் சமூகம், விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு என்று பெரும் அளவு நிதியையும், தங்கத்தையும், தமது உழைப்பையும், தமது பிள்ளைகளையும், தமது வாழ்வையுமே வழங்கியிருந்தது ஒன்றும் இலகுவில் மறுத்துவிட முடியாதது.

எனவே விடுதலைப்புலிகள் அமைப்பு அந்த மக்களுக்காகச் செய்யவேண்டிய விடயங்கள் என்று ஏராளம் இருக்கின்றன. எனவே விடுதலைப்புலிகள் அமைப்பின் இருப்பு என்பதும், செயற்பாடுகள் என்பதும் ஈழத் தமிழர்களுக்கு மிகுந்த பாதுகாப்பைத் தேடித்தரக்கூடிய ஒன்றாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது ஒரு பயங்கரவாத அமைப்பாக உலக நாடுகளால் அடையாளப்படுத்தப்பட்டு, விடுதலைப்புலிகள் உலக நாடுகள் பலவற்றால் தடைசெய்யப்பட்ட நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பு சர்வதேச ரீதியாக மேற்கொண்டு வரும் நகர்வுகள் என்பது எந்த அளவிற்கு ஈழத் தமிழரது போராட்டத்தை வெற்றிப் பாதையில் கொண்டு நகர்த்த உதவும் என்கின்ற கேள்விக்கு பதில் காணமுடியாமலேயே இருக்கின்றது.

எனவே ஈழத் தமிழர் தமது எதிர்கால அரசியல் இராஜதந்திரப் போராட்டத்தை சர்வதேச அரங்கில் விடுதலைப்புலிகளது தலைமையில் தொடர்ந்து முன்னெடுக்க விரும்பினால், விடுதலைப்புலிகள் மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள தடைகளை எவ்வாறு நீக்குவது என்பது பற்றிச் சிந்திப்பது அவசியம்.

அதற்கு முன்னதாக, விடுதலைப்புலிகள் மீது எதற்காக உலக நாடுகள் தடையை விதித்தன என்றும், அந்த தடைகளின் பரிமாணங்கள் என்ன என்றும் சித்திப்பது அவசியம்.

இது பற்றி ஈழத் தமிழர்களும் சிந்திக்கவேண்டும். விடுதலைப்புலிகள் அமைப்பும் சிந்திக்கவேண்டும்.

இன்று விடுதலைப்புலிகள் அமைப்பை உலகில் 32 நாடுகள் தடை செய்து இருக்கின்றன.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தார்கள் என்று குற்றம் சுமாத்தி விடுதலைப்புலிகளை இந்தியா 1992ம் ஆண்டு தடை செய்தது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்க விடுதலைப்புலிகள் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் 1997ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் திகதி இணைத்துக்கொண்டது. (அமெரிக்கா விடுதலைப்புலிகள் அமைப்பை விஷேட சர்வதேச பயங்கவாதிகள் அமைப்பாக (Specially Designated Global Terrorist) 2.11.2001 இல் பிரகடனம் செய்து தடை செய்துள்ளது)

1998ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளை தடை செய்தது. (இந்தத் தடையை புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 2002 செப்டெம்பர் 4ம் திகதி நீக்கிய போதும், 2009ம் ஆண்டு ஜனவரி 7ம் திகதி மீண்டும் புலிகள் மீதான தடையை நடைமுறையப்படுத்தியது)

2000ம் ஆண்டு பிரித்தானியா விடுதலைப்புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாகக் கூறி தடை செய்தது.

2006ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 நாடுகள் விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்து தடை செய்தன. விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிரிகள் என்கின்ற வாதத்தை ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றம் நிராகரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

2006ம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகளைத் தடை செய்த கனடா, விடுதலைப்புலிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதில்லை என்கின்ற கொள்கையையும் கடுமையாகக் கடைப்பிடித்து வருகின்றது.

2001ம் ஆண்டு ஒஸ்ரேலியா விடுதலைப்புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்தி (Resolution 1373) தடைசெய்தது.

இன்று யுத்தம் முடிவடைந்து, விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனித்ததாக அறிவித்து ஒரு ஆண்டு கடந்துவிட்டுள்ள நிலையிலும், விடுதலைப்புலிகளைத் தடை செய்துள்ள 32 நாடுகளில் எந்த ஒரு நாடும் புலிகள் மீதான தடையை இதுவரை நீக்கவில்லை. அப்படி நீக்குவதான சமிக்ஞையையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

சர்வதேச மட்டத்தில் பாரிய அரசியல் இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்கவேண்டிய நிலையில் உள்ள தமிழர் தரப்பிற்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு விடயமாக இது இருக்கின்றது என்பதில் சந்தேகம் இல்லை.

பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட நிலையில், முக்கிய ஜனநாயக நாடுகள் அனைத்திலும் தடை செய்யப்பட்ட நிலையில் ஒரு இராஜதந்திர நகர்வை விடுதலைப்புலிகள் தலைமையிலான தமிழர் தரப்பு செய்யவே முடியாது. எனவே, விடுதலைப்புலிகள் மீதான தடையை எவ்வாறு நீங்குவது என்பது பற்றி சிந்தித்தேயாகவேண்டிய கட்டாயத்தில் ஈழத் தமிழினம் இன்று நின்றுகொண்டிருக்கின்றது.

விடுதலைப்புலிகள் மீதான பயங்கரவாதச் சாயத்தை எப்படிப் போக்குவது? விடுதலைப்புலிகள் மீதான தடைகளை எவ்வாறு நீக்குவது?

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது பற்றிப் பார்ப்பதற்கு, முதலில் விடுதலைப்புலிகள் மீது சுமார் 32 நாடுகள் எதற்காக தடையை விதித்தன என்று பார்ப்பது அவசியம்.

விடுதலைப்புலிகள் மீது மேற்படி இந்த நாடுகள் ஏதற்காகத் தடைகளை விதித்தன என்று பார்க்கின்ற பொழுது, பொதுவாக சில முக்கிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே புலிகள் மீதான தடைகளை அந்நாடுகள் விதித்ததுடன், விடுதலைப்புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாகவும் அடையாளப்படுத்தி வருகின்றார்கள்.

1. விடுதலைப்புலிகள் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்கின்றார்கள்.

2. விடுதலைப்புலிகள் சிறுவர்களை படைகளில் இணைக்கின்றார்கள்.

3. சர்வதேச ஆயுதக்கடத்தல்களில் ஈடுபடுகின்றார்கள்.

4. ஜனநாயகரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொலை செய்கின்றார்கள்.

பொதுவாகவே இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக வைத்துத்தான் விடுதலைப்புலிகள் மீதான தடைகளை உலக நாடுகள் விதித்திருந்தன.

இதுபோன்ற பொதுவான குற்றச்சாட்டுக்கள் ஒருபுறம் இருக்க, விடுதலைப்புலிகள் மீது இந்த நாடுகள் தடைகளை விதிப்பதற்கும், புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்துவதற்கும் வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றன.

உதாரணத்திற்கு, விடுதலைப்புலிகள் கடற் கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டு சில நாடுகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

ஐரிஷ் மோனா (Irish Mona) என்ற கப்பலை 1995ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் விடுதலைப்புலிகள் கடத்தியதாகவும், பிறின்சஸ் வேவ் (Princess Wave) என்ற கப்பலை 1996ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் புலிகள் கடத்தியதாகவும், அதனா (Athena) என்ற கப்பலை சர்வதேச நீர்பரப்பில் வைத்து 1997ம் ஆண்டு மே மாதம் புலிகள், கடத்தியதாகவும், 1997ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் எம்.வீ. கோடியலி (MV Cordiality ) என்ற கப்பலையும், 1998ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பிரின்சஸ் காஷ் (Princess Kash) என்ற கப்பலையும் 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்.வீ.பாரா-3 (MV Farah III ) என்ற கப்பலையும் சர்வதேச கடற்பரப்பில் வைத்து விடுதலைப்புலிகள் கடத்தியதாகவும் சர்வதேச நாடுகள் குற்றம் சுமத்துகின்றன.

அத்தோடு, 1999ம் ஆண்டு மே மாதம் 25ம் திகதி இந்தியாவில் இருந்து புறப்பட்ட மலேசியாவுக்குச் சொந்தமான எம்.வி. சிக் யங் (MV Sik Yang) என்ற காகோ கப்பல் இலங்கையின் வடக்கு–கிழக்கு கடல் பிரதேசத்தில் வைத்து வைத்து காணாமல் போயிருக்கின்றது. அந்தக் கப்பலில் பயணம் செய்ய 31 மாலுமிகளுக்கும் என்ன நடந்தது என்றும் தெரியவில்லை. அந்தக் கப்பலை விடுதலைப்புலிகளே கடத்தி இருக்கவேண்டும் என்றும், அதனது பெயரை மாற்றி தமது நடவடிக்கைகளுக்கு அந்தக் கப்பலை புலிகள் பயன்படுத்துவதாக சர்வதேச நாடுகள் சில குற்றம் சுமத்துகின்றன.

கனடா, ரொறன்ரோவை அடித்தளமாகக் கொண்டு செயற்படும் மெக்கனைஸ் நிறுவனம் (Mackenzie Institute), உலகளாவிய ரீதியில் திட்டமிட்ட ரீதியாக மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் பற்றிய ஆய்வினைச் செய்துவரும் ஒரு சர்வதே அமைப்பு. விடுதலைப்புலிகளைப் புலிகள் அமைப்பான சர்வதேச ரீதியில் ஆயுதக் கடத்தல்களை மேற்கொண்டு வருவதாக இந்த மெக்கனைஸ் நிறுவனம் (Mackenzie Institute) வெளியிட்ட அறிக்கையானது, சர்வதேச மட்டத்தில் விடுதலைப்புலிகள் தடை செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

விடுதலைப்புலிகள் ஆயுத மற்றும் வெடிபொருட்களைக் கடத்திவருவதாகவும் (international arms trafficking), இந்தக் கடத்தல்களுக்கு புலிகள் சர்வதேசக் கடற்பரப்பைப் பயன்படுத்தி வருவதாகவும் இந்த அமைப்பு குற்றம் சுமத்தியிருந்தது. சர்வதேச மட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு மியன்மாரிலும், தாய்லாந்தின் புகெட் பகுதியிலும் தளங்கள் இருப்பதாகவும், தன்சானியாவில் இருந்து இலங்கை அரசாங்கம் கொள்வனது செய்திருந்த 32,400 மோட்டார்களை (81mm) கடத்தியதாகவும் இந்த நிறுவனம் குற்றம் சுமத்தியிருந்தது.

அதேபோன்று விடுதலைப்புலிகள் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் நாடுகளில் பலவந்தமாக நிதிச் சேகரிப்பில் ஈடுபடுவதாகவும், கடல் கொள்ளை, ஆட்களை ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு இரகசியமாகக் கொண்டு செல்லுதல், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள், ஆயுதக் கடத்தல்கள் போன்றன காரணமாக சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பணம் சேகரிப்பதாகவும் பல சர்வதேச அமைப்புக்கள், பல நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள் குற்றம் சுமத்தியிருந்தன.

இவற்றிற்கு மேலாக, விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் சில இஸ்லாமிய போராட்டக் குழுக்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக பரவலாக வெளிவந்த செய்திகள்தாம், மேற்குலகம் விடுதலைப்புலிகள் மீது தடை விதிப்பதற்கும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான தமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் காரணமாக அமைந்திருந்தன.

விடுதலைப்புலிகளுக்கும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக வெளிவந்த செய்திகளில் பல உண்மைக்குக் புறம்பானவைகளாக, புலிகள் மீது களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கோடு புனையப்பட்டிருந்தாலும் கூட, அதற்கான சாத்தியங்களை புறக்கணிப்பதற்கு மேற்குலகம் தயாராக இருக்கவில்லை என்பதுதான் உண்மை.

70களின் நடுப்பகுதியில் பலஸ்தீன விடுதலை அமைப்பான Popular Front for the Liberation of Palestine என்ற அமைப்பிடம் விடுதலைப்புலிகள் பயிற்சி பெற்றது மாத்திரம் அல்ல, இந்த அமைப்புடன் இணைந்து தெற்கு லெபனானில் புலிகளும் நேரடியாகப் போராடியதற்கான ஆதாரங்களை இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் உலக நாடுகள் சிலவற்றின் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியிருந்தார்கள்.

அதேபோன்று 1998ம் ஆண்டில் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட பிரகடனம் ஒன்றில், உலகின் முதலாளித்துவதற்கு எதிராக போராடிவரும் சர்வதேச விடுதலைப் போராட்ட சக்திகள், சோசலிச நாடுகள் போன்றனவற்றுடன் கைகோர்த்து நாமும் போராடுவோம் என்று கூறப்பட்டிருந்ததையும், மேற்குலகம் தனது கவனத்தில் எடுத்துக்கொண்டிருந்தது.

இதேபோன்று ஜனநாயத்தின் ஒரு முக்கிய தளம் என்று கூறி அமெரிக்க-பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு வெளிவருகின்ற Westminster Journal என்ற செய்தி ஊடகம், விடுதலைப்புலிகள் அமைப்பு 1990ம் ஆண்டில் மொறோ இஸ்லாமிய விடுதலை முன்னணி (Moro Islamic Liberation Front -MILF) என்ற அமைப்பிற்கும், அபுசையாப் குழு (Abu Sayyaf Group -ASG) என்று அமைப்பிற்கும் பயிற்சி வழங்கியதை மேற்குலகின் புலனாய்வு அமைப்புக்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தனது ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்திருந்தது. இந்த இரண்டு அமைப்புக்களுமே சர்வதேச பயங்கவாத அமைப்பாக உலகநாடுகளால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அல்கைதாவுடன் தொடர்புபட்ட அமைப்புக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போன்று இந்திய இஸ்லாமிய போராட்ட அமைப்பான அல் உம்மா (Al Ummah) என்ற அமைப்பிற்கும் விடுதலைப்புலிகள் பயிற்சி வழங்கியதாக இந்தியப் புலனாய்வுப்பிரிவு குற்றம் சுமத்தியிருந்தது.

இதுபோன்ற பரவலான குற்றச்சாட்டுக்கள், திட்டமிட்ட காய் நகர்த்தல்கள் காரணமாக விடுதலைப்புலிகளை சர்வதேச சமூகம் பயங்கரவாதிகளாக, தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பாக அடையாளப்படுத்தும் நிலை உருவானது.

விடுதலைப்புலிகள் மீதான தடைக்கான காரணங்கள் என்று ஆராய்கின்ற பொழுது, அதற்கு விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளும், புலிகளை சர்வதேசப் பொறிக்குள் வீழ்த்தி தடை செய்வதற்காக எதிரிகள் வகுத்த வியூகங்களும் ஒரு காரணம் என்றால், மறுபக்கம் சில ஈழத் தமிழர்கள் தன்னிச்சையாக மேற்கொண்ட நடவடிக்கைகளும் காரணமாக இருந்தன என்பதையும் இங்கு நான் சுட்டிக்காண்பித்துத்தான் ஆகவேண்டும்.

புலம்பெயர்ந்த நாடுகளில் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்களாக, விசுவாசிகளாக, பணியாளர்களாக, ஆதரவாளர்களாகச் செயற்பட்ட சில ஈழத் தமிழர்கள் தனிப்பட்ட ரீதியில் மேற்கொண்ட சில சட்டவிரோத நடவடிக்கைகள் கூட, விடுதலைப்புலிகளின் தடைக்கு சில வழிகளில் காரணமாக அமைந்திருந்தன.

உதாரணத்திற்கு, 1993ம் இல் அமெரிக்கவில் உள்ள உலக வர்த்தக மையம் மீது இஸ்லாமிய தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் ரம்சி யூசுப் (Ramzi Yousef) என்பவருக்கு ஒரு ஈழத் தமிழரே போலிக் கடவுச் சீட்டு தயாரித்துக் கொடுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு போலிக் கடவுச் சீட்டு தயாரித்துக் கொடுத்த நபர் விடுதலைப்புலிகள் அமைப்பின் பகுதி நேரப் பணியாளராக செயற்பட்டிருந்தார். இதனைக் காரணமாக வைத்து ரம்சி யூசுப்பிற்கு விடுதலைப்புலிகள் அமைப்பே போலிக் கடவுச் சீட்டை வழங்கியிருந்ததாக South Asian Terrorism Portal என்ற அமைப்பு குற்றம் சுமத்தியிருந்தது.


இதேபோன்று, கொலம்பியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு ஈழத் தமிழர் கைது செய்யப்பட்ட போழுது, அவர் ஒரு விடுதலைப்புலி செயற்பாட்டாளராக இருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு திரிந்த பலர் தனிப்பட்ட ரீதியில் மேற்கொண்ட பல சட்டவிரோதச் செயல்கள் கூட, விடுதலைப்புலிகள் சர்வதே ரீதியில் தடைசெய்யப்படக் காரணமாக அமைந்திருந்தன.

அத்தோடு, சாதாரணமாக மேற்குலகிற்கு அகதிகளாகப் புலம் பெயர்ந்த பெரும்பாலான மக்கள் தாங்கள் அகதி அந்தஸ்து பெற வேண்டும் என்பதற்காக அந்தந்த நாட்டு அரசாங்கங்களிடம் விடுதலைப்புலிகளை மோசமாகச் சித்தரித்துக் கொடுத்த வாக்கு மூலங்கள் கூட, விடுதலைப்புலிகள் ஒரு மக்கள் போராட்ட அமைப்பு அல்ல என்கின்ற தீர்மானத்தை மேற்குலகம் எடுக்கக் காரணமாக அமைந்திருந்ததாக அண்மையில் என்னுடன் பேசிய மேற்குலகு இராஜதந்திரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

சரி, இப்பொழுது கேள்வி இதுதான்.


விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது எப்படி?

தற்பொழுது யுத்தம் முடிவடைந்து விட்டது. எனவே புலிகள் மீது பிரதானமாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களான: விடுதலைப்புலிகள் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்கின்றார்கள், விடுதலைப்புலிகள் சிறுவர்களை படைகளில் இணைக்கின்றார்கள், சர்வதேச ஆயுதக்கடத்தல்களில் ஈடுபடுகின்றார்கள், ஜனநாயகரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொலை செய்கின்றார்கள் போன்ற எந்த ஒரு விடயமும் விடுதலைப்புலிகள் தரப்பால் தற்பொழுது செய்யப்படுவதில்லை.

கடந்த ஒரு வருடமாக மேற்குறிப்பிட்ட எந்த ஒரு நடவடிக்கையுமே நடைபெற்றிருக்கவில்லை. விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை முற்றாகவே மௌனித்து, ஜனநாயக வழிகளிலேயே தமது விடுதலையை வென்றெடுக்க விளைகின்றார்கள். எனவே விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கான முகாந்திரங்கள் பல நாடுகளில் தானாகவே இல்லாமல் போய்விடுகின்றன.

இந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு விடுதலைப்புலிகள் தரப்பும், உலகத் தமிழ் அமைப்புக்களும் புலிகள் அமைப்பின் மீதான தடையை சர்வதேச மட்டத்தில் நீக்குவதற்கான நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும்.

முதலாவதாக விடுதலைப்புலிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் தரப்பினர் தாம் உலக நியதிகளின்படிதான் தமது மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர ஆவலாக இருக்கின்றோம் என்கின்ற விடயத்தை உலக நாடுகளுக்கு கூற முயலவேண்டும். அடிக்கப் போகின்றார்கள்.. பிடிக்கப் போகின்றார்கள் அதோ அங்கே பத்தாயிரம் பேர் இருக்கின்றார்கள்.. இதோ இங்கே இவர் இருக்கின்றார் போன்ற அறிக்கை பம்மாத்துக்களைத் தவிர்க்க வேண்டும்.

அடுத்ததாக, விடுதலைப்புலிகள் மீது கிரிமினல் குற்றங்கள் எதுவும் வராத அளவிற்கு அந்த அமைப்பின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் செயற்படவேண்டும். அடாவடித்தனங்கள், சமூகவிரோதச் செயல்கள் போன்றனவற்றில் ஈடுபடும் உறுப்பினர்களை அமைப்பில் இருந்து பகிரங்கமாக விலக்கி வைக்கவேண்டும். ஜனநாயக நடைமுறையில் தமக்கு இருக்கும் ஈடுபாட்டை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தவேண்டும்.

மேற்கூறியனவற்றைச் செய்துவிட்டு, பல்வேறு நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் ஊடாக அந்தந்த அரசாங்கங்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும்.


இதுபோன்ற பல்வேறு வியூகங்களை வகுத்து நகர்வெடுக்கின்றபொழுது விடுதலைப்புலிகள் மீது பல நாடுகள் விதித்திருக்கும் தடைகள் தானாகவே நீக்கப்படுவதற்குச் சந்தர்ப்பம் இருக்கின்றது.

Wednesday, May 19, 2010

Senior SLA officer: ‘Kill everybody!’ order came from the top

A senior Sri Lankan Army commander and frontline soldier have told Britain’s Channel 4 News that point-blank executions of Tamils at the end of the civil war in May 2009 were carried out under orders ‘from the top’. In an extended segment on Sri Lanka Tuesday, Channel 4 broadcast translated video interviews with the two soldiers. Surrendering LTTE fighters and their families were detained, tortured and shot, the trooper said. Channel 4 also interviewed in the studio the former Chief Prosecutor for the International Criminal Tribunals for the former Yugoslavia and for Rwanda, Louis Arbour, who slammed the impunity enjoyed by Sri Lankan forces throughout the armed conflict. Sri Lanka’s ambassador to the United Nations, Palitha Kohana, failed to show up, despite agreeing beforehand to appear to defend his government’s record.

The senior Sri Lankan army commander said: "I don't think we wanted to keep any hardcore elements, so they were done away with. It is clear that such orders were, in fact, received from the top."

"Definitely, the order would have been to kill everybody and finish them off,” he said. “It is clear such orders would have been received from the top.”
Tthe Sri Lankan trooper said: “Our commander ordered us to kill everyone. We killed everyone.”

He confirmed he killed civilians. Surrendering LTTE fighters and their families were detained and tortured before being shot, the soldier also said.

Channel 4 News broadcast several photographs taken by soldiers from the killing fields in Northeastern Sri Lanka, showing piles of bodies, lines of corpses and terrified civilians. Some of the bodies had their hands tied behind their backs.

The program quoted soldiers’ as saying LTTE leader Pirapaharan’s thirteen year old son had also been shot dead after surrendering with his bodyguards.

Speaking on the Channel 4’s flagship news program at 7pm, Louis Arbour said there was no possibility of Sri Lanka holding a proper inquiry into the war crimes, noting that since the conflict began there had been impunity.

She questioned the viability of the Sri Lankan government investigating the conduct of its own armed forces.

A senior Amnesty International official told Channel 4 News his organisation had this week launched a world-wide campaign to highlight the need for an independent international investigation into war crimes in Sri Lanka.

London-based Amnesty International and New York-based Human Rights Watch have joined Brussels-based International Crisis Group in this regard, Channel 4 said.

This week International Crisis Group, of which Arbour is currently head, released a detailed account of the mass slaughter during the final months of the conflict last year. The report said “the scale of death was much higher than reported at the time, and certainly high enough to triple the UN’s internal figure of 7,000.”

Noting that both the LTTE and the Sri Lankan armed forces were responsible for war crimes, the report made clear that “all but a small portion of these deaths were due to government fire”

“Eventually, an independent and impartial survey of those still living in the Northern Province will be needed to establish this part of Sri Lanka’s history,” ICG said.

On Monday night Arbour told an audience at Chatham House – the foreign policy think tank – that "the [Sri Lankan] government's refusal to distinguish between combatants and non-combatants" and the "sheer magnitude of civilian death and suffering" dealt what she called "the most serious of body blows to international humanitarian law".

Despite Channel 4 ‘desperately’ trying to locate him, Sri Lanka’s ambassador to the United Nations, Palitha Kohana, failed to show up, despite agreeing beforehand to appear to defend his government’s record, news anchor Jon Snow said.

Sri Lanka’s London High Commission meanwhile issued a statement totally denying the allegations of war crimes.

“The High Commission of Sri Lanka in the United Kingdom totally deny the allegations made against the Government of Sri Lanka and its armed forces. As it has been repeatedly stressed and supported by evidence, Government’s security forces were engaged in a humanitarian operation with the objective of rescuing the civilians held as human shields by a terrorist outfit: the LTTE, which was banned in many countries including the UK,” the statement said.

“All internationally accepted standards and norms of such operations were followed in the prosecution of the humanitarian operation by the security forces which were under strict orders to follow a zero civilian casualty policy.”

Thursday, May 6, 2010

தமிழீழத்தை அழித்தவர்களை புலம்பெயர் தமிழீழம் பழிவாங்க வேண்டும்!!! மறக்குமா?? மன்னிக்குமா?? பழிவாங்குமா??.. Good Article on Nerudal

ஈழத் தமிழர் மீதான அழித்தொழிப்பு யுத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு ஒரு ஆண்டு நெருங்கிக்கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழ் இனத்தின் வரலாற்றில் என்றைக்குமே மறக்கமுடியாத நாட்கள் அவை.


ஈழத் தமிழர்கள் ஒரு மூலைக்குள் முடக்கப்பட்டு பட்டினி போடப்பட்டு இரசாயனக் குண்டுகளாலும் கனரக ஆயுதங்களாலும் துடிக்கத் துடிக்க அழிக்கப்படதான ஒரு நிகழ்வு சுமார் ஒரு வருடத்தின் முன்னர் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.

கைகளில் வெள்ளைக்கொடியை ஏந்தியபடி சரணடையச் சென்றவர்களைக் கூட சகட்டுமேனிக்குச் சுட்டுத்தள்ளிய கொடுரம் அரங்கேறியிருந்தது. போர்க்கைதிகளை படுகாயப்பட்ட போராளிகளை இரக்கமின்றி கொலை செய்த கொடுமை நடைபெற்றிருக்கின்றது. குழந்தைகள் வயது முதிர்ந்தவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் என்று எந்த பரிதாபமும் இல்லாமல் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகாமான அப்பாவித் தமிழ் மக்களை முற்கம்பி வேலிகளுக்குள் அடைத்து தனது வெற்றியைக் கொண்டாடிய அசிங்கம் எமக்கு நிகழ்ந்திருந்தது.

11 ஆயிரத்திற்கும் அதிகமான எமது உறவுகளை யாருடைய கண்களுக்கும் தெரியாமல் இன்னமும் சிறைகளுக்குள் மறைத்து வைத்து சித்திரவதை செய்து தமது காழ்ப்புணர்வை வெளிப்படுத்தி வருகின்றது சிறிலங்கா தேசம்.

எம்மீதான இத்தனை கொடுமைகள் புரியப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகின்றது. இந்த ஒரு வருட காலத்தில்; எமது இனத்தின் மீது புரியப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக அல்லது இந்த அநீதிகளுக்குப் பதிலாக எமக்கு இழைக்கப்பட்ட அவமானங்களுக்கு எதிராக நாம் என்ன செய்திருக்கின்றோம்?

மாவிலாறு முதல் முள்ளிவாய்கால் வரை அநியாயமாக மரணித்த எமது உறவுகளின் ஆத்மாக்கள் சாந்தி அடைய நாம் என்ன செய்திருக்கின்றோம்?

Home » கட்டுரைகள், செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி » தமிழீழத்தை அழித்தவர்களை புலம்பெயர் தமிழீழம் பழிவாங்க வேண்டும்!!! மறக்குமா?? மன்னிக்குமா?? பழிவாங்குமா??


தமிழீழத்தை அழித்தவர்களை புலம்பெயர் தமிழீழம் பழிவாங்க வேண்டும்!!! மறக்குமா?? மன்னிக்குமா?? பழிவாங்குமா??

இவ் விடயம் 06. 05. 2010, (புதன்), தமிழீழ நேரம் 3:47க்கு பதிவு செய்யப்பட்டது

கட்டுரைகள், செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்திஈழத் தமிழர் மீதான அழித்தொழிப்பு யுத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு ஒரு ஆண்டு நெருங்கிக்கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழ் இனத்தின் வரலாற்றில் என்றைக்குமே மறக்கமுடியாத நாட்கள் அவை.

ஈழத் தமிழர்கள் ஒரு மூலைக்குள் முடக்கப்பட்டு பட்டினி போடப்பட்டு இரசாயனக் குண்டுகளாலும் கனரக ஆயுதங்களாலும் துடிக்கத் துடிக்க அழிக்கப்படதான ஒரு நிகழ்வு சுமார் ஒரு வருடத்தின் முன்னர் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.

கைகளில் வெள்ளைக்கொடியை ஏந்தியபடி சரணடையச் சென்றவர்களைக் கூட சகட்டுமேனிக்குச் சுட்டுத்தள்ளிய கொடுரம் அரங்கேறியிருந்தது. போர்க்கைதிகளை படுகாயப்பட்ட போராளிகளை இரக்கமின்றி கொலை செய்த கொடுமை நடைபெற்றிருக்கின்றது. குழந்தைகள் வயது முதிர்ந்தவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் என்று எந்த பரிதாபமும் இல்லாமல் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகாமான அப்பாவித் தமிழ் மக்களை முற்கம்பி வேலிகளுக்குள் அடைத்து தனது வெற்றியைக் கொண்டாடிய அசிங்கம் எமக்கு நிகழ்ந்திருந்தது.

11 ஆயிரத்திற்கும் அதிகமான எமது உறவுகளை யாருடைய கண்களுக்கும் தெரியாமல் இன்னமும் சிறைகளுக்குள் மறைத்து வைத்து சித்திரவதை செய்து தமது காழ்ப்புணர்வை வெளிப்படுத்தி வருகின்றது சிறிலங்கா தேசம்.

எம்மீதான இத்தனை கொடுமைகள் புரியப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகின்றது. இந்த ஒரு வருட காலத்தில்; எமது இனத்தின் மீது புரியப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக அல்லது இந்த அநீதிகளுக்குப் பதிலாக எமக்கு இழைக்கப்பட்ட அவமானங்களுக்கு எதிராக நாம் என்ன செய்திருக்கின்றோம்?

மாவிலாறு முதல் முள்ளிவாய்கால் வரை அநியாயமாக மரணித்த எமது உறவுகளின் ஆத்மாக்கள் சாந்தி அடைய நாம் என்ன செய்திருக்கின்றோம்?


புலம்பெயர்ந்த நாடுகளின் தெருக்களில் நின்று கோஷம் போட்டிருக்கின்றோம். எம் தலைவன் காட்டிய வழியில் தொடர்ந்து நடப்போம் என்று இணையத் தளங்களிலும் வானொலி தொலைக்காட்சிகளிலும் வீர வசனம் பேசி இருக்கின்றோம் ஐ.நாவுக்கும் ஒபாமாவுக்கும் கடிதங்கள் போட்டிருக்கின்றோம். எம்மோடு உடன் இருந்த சிலருக்கு துரோகப்பட்டம் கட்டியிருக்கின்றோம் பல உயரிய தியாகங்களை மறைத்து அந்தத் தியாகங்களைக் கொச்சைப்படுத்தியிருக்கின்றோம். முழு மூச்சாக த.தே.கூட்டமைப்பை பிழவுபடுத்தியிருக்கின்றோம்;. நடிகர் விஜய்யின் படத்தை புறக்கணித்து இருக்கின்றோம். இலங்கைக்கு ஒரிரு தடவைகள் இரகசியமாகப் போய் வந்திருக்கின்றோம். புதிய புதிய இணையத் தளங்களைத் திறந்து ஒருவர் மீது ஒருவர் காறி உமிழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

இவற்றைத் தவிர எமது இனத்தின் மீது புரியப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக கடந்த ஒரு வருட காலத்தில் நாம் வேறு ஏதாவது செய்திருக்கின்றோமா என்று யாராவது கேட்டால் சிறிது நேரம் யோசித்துப் பார்த்துவிட்டு இல்லை என்றுதான் பதில் கூறவேண்டி இருக்கின்றது.

ஆம். எமது இனத்தின் மீதான ஒரு அழித்தொழிப்பு யுத்தம் நடைபெற்றிருக்கின்றது. எமது இனத்தின் மீதான ஒரு அப்பட்டமான இன அழிப்பு நடைபெற்றிருக்கின்றது. எமது இனத்தை கருவறுத்தவர்களை பழிவாங்கவேண்டும் என்ற எண்ணம் எமக்கு ஏற்படவில்லை என்றால் ஒரு இனம் என்று கூறிக்கொள்ளும் தகுதியை நாம் நிச்சயம் இழந்தவர்களாகிவிடுவோம்.

இப்பொழுது உங்களிடம் ஒரு கேள்வி எழலாம்.

எங்களால் என்ன செய்ய முடியும்? எங்களின் பலம்தான் அழிக்கப்பட்டுவிட்டதே? இனி எங்களால் எதைத்தான் செய்யமுடியும்? – இவ்வாறு நீங்கள் கேள்வி எழுப்பலாம்.

எங்களிடம் இல்லாத பலத்தைப் பற்றிக் கவலைப்படாமல்;. எங்களிடம் இருக்கின்ற பலத்தை வைத்துக்கொண்டு அந்த யுத்தக் குற்றவாளிகளை எப்படி பழிவாங்கலாம் என்று யோசிப்பதுதான் சாலச்சிறந்தது.

அப்படி என்னதான் பலம் எங்களிடம் இருக்கின்றது? எங்களை அழித்த பலவான்கனை பழிவாங்கக் கூடிய அளவிற்கு என்ன பலம் எங்களிடம் இருக்கின்றது?

அண்மையில் புலம்பெயர் நாடொன்றில் நடந்த சில சம்பவங்களை மாத்திரம் இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக் காண்பிக்கின்றேன். அதன் பின்னர் எங்கள் இனத்தின் மீது கொடுமை புரிந்தவர்களை எங்களிடம் இருக்கின்ற சிறிய பலத்தை வைத்துக்கொண்டு எப்படி எங்களால் பழிவாங்க முடியும்; என்று உங்களுக்கு நன்றாகவே புரியும் என்று நான் நம்புகின்றேன்.

கடந்த டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் திருமதி சிப்பி லிவினி(Tzipi Livni ) பிரித்தானியாவுக்கு பயணமாக இருந்த நேரத்தில் அவருக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி கிடைத்தது.

பிரித்தானியாவில் வைத்து அவரைக் கைதுசெய்வதற்கான பிடியானையை பிரித்தானிய நீதிமன்றம் பிறப்பித்திருப்பதான செய்தி அவருக்குக் கிடைத்தது.

இஸ்ரேலின் ஆட்சியில் அங்கம் வகிக்கும் அனைவருக்குமே அது ஒரு பெரிய அதிர்சியை ஏற்படுத்தியிருந்தது.

Tzipi Livni ஒரு சாதாரணமான பெண் அல்ல. இஸ்ரேல் தேசத்தின் அரசியலில் ஒரு முக்கிய அங்கம் வகிப்பவர்.

இஸ்ரேலின் எதிர்கட்சித் தலைவர்.

அவர் மீதான கைது ஆணையை அதுவும் இஸ்ரேலின் மிக முக்கிய நட்பு நாடான பிரித்தானியாவின் நீதிமன்றம் பிறப்பித்திருப்பது ஒரு பெரிய அதிர்ச்சியை இஸ்ரேலின் அனைத்து மட்ட அரசியல் மற்றும் நிர்வாகத் தலைவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது.

எதற்காக இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் மீது லண்டன் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது?

2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் திகதி இஸ்ரேலின் காசாப் பிரதேசம் மீது இஸ்Nலியப் படைகள் ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. காஸ்ட் லீட் படை நடவடிக்கை (Operation Cast Lead) என்ற பெயரில் இஸ்ரேலிய முப்படைகளும் இணைந்து மேற்கொண்ட அந்த நடவடிக்கை மிகப் பெரிய அவலத்தை காசாப் பகுதியில் ஏற்படுத்தியிருந்தது. காசாப் பகுதியில் இருந்து இஸ்லாமிய கமாஸ் போராளிகள் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் முகமாகவே இஸ்ரேலியப் படைகள் இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்கள்:


2008 டிசம்பர் 27ம் திகதி முதல் 2009ம் ஆண்டு ஜனவறி மாதம் 18ம் திகதி வரை நடைபெற்ற இஸ்ரேலின் அந்த மூன்றுவார இராணுவ நடவக்கையில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 1400 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டார்கள். 50ஆயிரம் பலஸ்தீனர்களின் வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டன.

காசாப் பகுதி மீது இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட அந்த படை நடவடிக்கையை உலகம் முழுவதும் கண்துடைப்பிற்காக கண்டித்திருந்தாலும் அமெரிக்கா பிரித்தானியா உட்பட மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவே நிலைப்பாடு எடுத்திருந்தன.

இந்த இராணுவ நடவடிக்கையில் இஸ்ரேல் பாரிய போர் குற்றங்களைப் புரிந்ததாகவும் மனிதத்திற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் ஐ.நா. கடுமையான கண்டணத்தை வெளியிட்டிருந்தது. சிவிலியன் மீது இஸ்ரேலியப் படைகள் எறிகணை மன்றும் குண்டு வீச்சுக்களை திட்டமிட்டே மேற்கொண்டதாகவும் பொஸ்பரஸ் குண்டுகள் உட்பட தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை அந்த இராணுவ நடவடிக்கையில் இஸ்ரேலியப் படைகள் பாவித்ததாகவும் பலஸ்தீன மக்களை மனிதக் கேடயங்களாக இஸ்ரேலியப் படைகள் பாவித்ததாகவும் வைத்தியசாலைகள் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடாத்தியதாகவும் ஐ.நா. உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியிருந்தன. ஆனாலும் வெறும் கண்டனங்கள் என்பதற்கு அப்பால் இஸ்ரேலை எவராலும் எதுவும் செய்துவிடமுடியவில்லை.

உலகம் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்க இஸ்ரேலின் படைநடவடிக்கையில் பாதிக்கப்பட்டு பிரித்தானியாவுக்கு அகதிகளாக வந்த சில பலஸ்தீனர்களும் பிரித்தானியாவில் உள்ள சில பலஸ்தீன அமைப்புக்களும் இணைந்து பிரித்தானியாவின் சட்டத்தின் கீழ் இஸ்ரேலிய தலைவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் ஒன்றை மேற்கொண்டார்கள்: வழக்கை விசாரித்த பிரித்தானிய நீதிமன்றம் இஸ்ரேலின் Operation Cast Lead என்ற இராணுவ நடவடிக்கை இடம்பெற்ற காலப்பகுதியில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த Tzipi Livni இனைக் கைதுசெய்யும்படி பிடியானை பிறப்பித்தது. பிரித்தானிய மண்ணில் காலடி எடுத்துவைத்தால் அவரை உடனடியாகவே கைதுசெய்யும் நிலை இருந்தது.

இதேபோன்று காசாவிலும் மேற்குகரையில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் குற்றச் செயல்களுக்காக பிரித்தானியாவின் சட்டத்தில் காணப்படுகின்ற சில ஆரோக்கிமான சரத்துக்களைப் பயன்படுத்தி இஸ்ரேலியத் தலைவர்களை பிரித்தானியாவுக்குள் நுழையவிடாது சங்கடங்களை ஏற்படுத்தும் முயற்சிகளை பலஸ்தீன அமைப்புக்கள் அண்மைக் காலமாகவே மேற்கொண்டு வருகின்றன.

இதேபோன்று கடந்த ஒக்டோபர் மாதம் பிரித்தானியாவுக்கு விமானத்தில் வந்த இஸ்ரேலின் துணைப்; பிரதமர் மொஷா யாலோன் (Moshe Yaalon) விமானத்தை விட்டு பிரித்தானிய மண்ணில் கால்வைக்காமல் திரும்பிச் சென்ற சம்பவமும் இடம்பெற்றிருக்கின்றது. 2002 ஆம் ஆண்டு அவர் பாதுகாப்புத்துறை உயரதிகாரியாக பதவிவகித்த காலத்தில் காசாப்பகுதியில் இஸ்ரேலியப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதலில் கமாஸ் அமைப்பின் ஒரு முக்கிய தலைவரும் அவரது மனைவி மற்றும் ஒன்பது பிள்ளைகளும் கொல்லப்பட்டிருந்தார்கள். இந்தக் கொலை தொடர்பாக பிரித்தானியாவில் உள்ள சில பலஸ்தீனர்களால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தால் Moshe Yaalon இற்கு எதிராக பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரித்தானியப் பயணம் மேற்கொண்ட மொஷா யாலோன் (Moshe Yaalon) விமான நிலயத்தில் தரையிறங்கினால் கைதுசெய்யப்படும் நிலையில் வந்த விமானத்திலேயே திரும்பிச் செல்லவேண்டி ஏற்பட்டது.

இதேபோன்று காசாவில் பலஸ்தீனர்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்குவதற்கு கட்டளையிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்ட டொரோன் அல்மொக் (Doron Almog) என்ற முன்னாள் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிக்கு எதிராக பிரித்தரியாவில் உள்ள பலஸ்தீன அமைப்பொன்று பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தது. 2005 இல் அவர் பிரித்தானியாவிற்கு பயணம் செய்த பொழுது லன்டன் கீட்துரோ (Heathrow) விமான நிலயத்தில் அவர் கைதுசெய்யப்படக்கூடிய சந்தர்ப்பம் இருந்ததால் விமானத்தை விட்டு இறங்காமல் அதே விமானத்தில் அவர் இஸ்ரேல் திரும்பவேண்டி ஏற்பட்டது.

இதேபோன்று பிரித்தானியாவின் 1988 Criminal Justice Act இன்படி இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எகூட் பாரக்கை (Ehud Barak) கைதுசெய்யும்படியான ஆணையை பிரித்தானியா நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டும் என்று சில பலஸ்தீன அமைப்புக்கள் பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் செயற்படுகின்ற இது போன்ற சில பலஸ்தீன அமைப்புக்களின் செயற்பாடுகள் பல்வேறு இராஜதந்திரச் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் இஸ்ரேலுக்கு உருவாக்கி வருகின்றது.

இத்தனைக்கும் பிரித்தானியா இஸ்ரேலின் மிகப் பெரிய ஒரு நட்பு சக்தி. இஸ்ரேலின் அத்தனை அராஜகங்களையும் ஆசீர்வதித்து வருகின்ற ஒரு நாடுதான் பிரித்தானியா. பிரித்தானியாவில் உள்ள அனேகமான அரசியல் தலைவர்கள் அரசியல் கட்சிகள் அனைத்துமே இஸ்ரேலின் பக்கம்தான் நிற்கின்றார்கள். இஸ்ரேலியத் தலைவர்கள் மீது பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருப்பதை அவர்கள் அடியோடு எதிர்க்கின்றார்கள். ஆனாலும் பிரித்தானியாவின் நீதித்துறை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டு சுயாதீனமாகச் செயற்படுகின்றதான ஒரு நிலையில் உள்ளதைப் புரிந்துகொண்ட சில பலஸ்தீனர்கள் இஸ்ரேலுக்கு எதிராக பிரித்தானியாவின் நீதித்துறையை சரியான முறையில் பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டு வருகின்றார்கள்.



காசாவில் இஸ்ரேல் புரிந்ததாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்களை விட அதிக அளவிலான மிக மோசமான யுத்தக் குற்றங்கள் அதே காலப்பகுதியில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாஙங்கத்தால் புரியப்பட்டிருக்கின்றது. இப்படியான யுத்தக்குற்றங்கள் புரியப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை பிரித்தானியாவை மையமாகக்கொண்ட பல தொலைக்காட்சிகள் நிரூபித்தும் இருக்கின்றன. பிரித்தானியாவின் நாடாளுமன்றம் உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் இதனைக் கண்டித்தும் இருக்கின்றன.

இன்று பிரித்தானியாவில் சுமார் மூன்று இட்சம் தமிழர்கள் வாழ்வதாக ஒரு கணிப்பீடு காண்பிக்கின்றது. ஈழத் தமிழரின் நலன்காக்கவென்று அங்கு பல அமைப்புகள் நிறுவனங்கள் செயற்பட்டும் வருகின்றன.

அப்படி இருந்தும் ஈழத் தமிழர்கள் மீதான ஒரு இன அழிப்பை மேற்கொண்ட கொலைகாரர்களுக்கு எதிராக ஏன் ஒரு வழக்கு கூட பிரித்தானிய நீதிமன்றத்தில் எம்மால் தாக்கல்செய்யமுடியவில்லை?

பேச்சுக்கள் அறிக்கைகளைக் கடந்து ஏன் எமது இனம் சார்ந்த அமைப்புக்களால் அடுத்தகட்டத்திற்கு நகர முடியவில்லை?

எமது உறவுகளை அழித்துவிட்டு அவர்களது பிணங்களின் மீது ஏறி நின்று வெற்றிப் பிரகடனம் செய்த எத்தனையோ சிறிலங்காத் தலைவர்கள் சிரித்தபடி எங்கள் முன்னால் வலம்வந்துகொண்டிருக்கின்றார்கள்.

நாங்கள் வாழுகின்ற நாடுகளில் உள்ள சட்டங்களை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஏன் அவர்களை நாங்கள் பழிவாங்கக்கூடாது?

Niraj David

nirajdavid@bluewin.ch

Source : http://www.nerudal.com/

Monday, May 3, 2010

நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலில் கனடியத் தமிழர்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களிப்பு

ஏப்ரல் மாதம் 2ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இன்று கனடிய நேரப்படி மாலை 3.45. தற்போதைய சூழ்நிலையில் ஸ்காபுறோ மற்றும் ரொறன்ரோ ஆகிய நகரங்களுக்குச் சென்ற நமது செய்தியாளர்கள் தரும் தகவல்களின்படி கனடியத் தமிழர்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களிப்பதாகவும் தங்களுக்கு பிடித்தமான வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதில் அத்pக கவனம் எடுப்பதாகவும் அறியப்படுகின்றது.


குறிப்பாக ஸ்காபுறொவில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் ஆலய மண்டபத்தில் காலை 10.00 மணி தொடக்கம் நடைபெறும் வாக்களிப்பில் மக்கள் மிகவும் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்களிப்பதாகவும் சிலர் அங்கு காத்திருப்பதற்கு பொறுமையின்மை காரணமான வேறு வாக்களிப்பு நிலையங்களை நாடிச் செல்வதாகவும் விசேடமான முதியோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சொல்வதாகவும் அவர்கள் அனைவரும் தங்கள் விருப்பப்படியே வாக்களிப்பதாகவும் நமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்..

இதுவரையில் எந்த ஒரு வாக்களிப்பு நிலையத்திலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை எனவும் மிகவும் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெறுவதாகவும் கனடியத் தமிழர்கள் தங்கள் தங்கள் கருமங்களை முடித்து விட்டு வாக்களிப்பு நிலையங்களை நாடி அவரசமாகச் செல்லுவதை காணக்கூடியதாக உள்ளதாகவும் கனடிய நாடு கடந்த அரசிற்கான நிர்வாக அலுவலகம் தெரிவித்தது.

மேலும் அந்த அலுவலகம் தகவல் தருகையில் இன்றிரவு சுமார் 10.00 மணியளவில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரங்கள் ஊடகங்களுக்கு அறியத்தரப்படும் என்று தெரியவருகின்றது.


Friday, April 30, 2010

Sri Lanka demolishes Prabhakaran’s house

The ancestral home of Sri Lanka’s slain Tamil Tiger rebel chief Velupillai Prabhakaran has been demolished as it was becoming a tourist attraction, a Tamil politician said Thursday.

M. K. Sivajilingam, secretary of the Tamil National Liberation Alliance, accused security forces of destroying the house a year after Prabhakaran was killed when the rebels were finally defeated after decades of bloodshed.

“They (the government) are destroying pieces of history. They want to remove any traces of the LTTE (Liberation Tigers of Tamil Eelam),” Sivajilingam told AFP by telephone from the northern town of Jaffna.

Military spokesman Major General Prasad Samarasinghe and police spokesman Prishantha Jayakody denied any knowledge of the demolition.


The house, owned by Prabhakaran’s parents, was situated in the Jaffna peninsula in northern Sri Lanka.

Sivajilingam said many visitors from the island’s south had headed to the house after the conflict ended.

He led the Tigers throughout their violent struggle for a separate ethnic homeland, gaining a reputation as one of the world’s most ruthless and effective guerrilla leaders.


http://www.sify.com/

பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சை அளிக்க தயார்: தமிழக அரசு

பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.
இதை எதிர்த்து வழக்கறிஞர் கருப்பன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16ஆம் தேதி மலேசியாவில் இருந்து சென்னை வந்த பார்வதி அம்மாளை குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

விசா உள்ளிட்ட உரிய அனுமதியுடன் வந்த பார்வதி அம்மாளை, இந்தியாவுக்குள் அனுமதிக்காகதது சர்வதேச மனித உரிமை மீறல். இதனால் பார்வதி அம்மாளை தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை அழைத்து வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார். மேலும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு வக்கீல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி வாதாடுகையில்,

பிரபாகரனின் தந்தை வேலுபிள்ளை மற்றும் தாய் பார்வதி அம்மாள் ஆகியோரை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு கடந்த 2003ஆம் ஆண்டு தமிழக அரசு கடிதம் எழுதியது. அதன் அடிப்படையிலேயே பார்வதி அம்மாள் அனுமதிக்கப்படவில்லை.

தமிழக அரசு தனது கடிதத்தினை திரும்ப பெறும் வரையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒன்றும் செய்ய இயலாது என்றார்.

அப்போது தமிழக அரசு வக்கீல் ராஜா கலிபுல்லா கூறியதாவது:

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளிடம் இருந்து அரசுக்கு இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை. அவர் மனு கொடுத்தால் அதை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கேட்கப்படும். அதன் அடிப்படையில் சிகிச்சைக்கு அனுமதிக்க தயார் என்றார்.

மத்திய அரசு வக்கீல் ரவீந்திரன் கூறுகையில், தமிழக அரசு கேட்டுக்கொண்டால் இது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க தயாராக உள்ளது என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறுகையில், பார்வதியம்மாளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக 2 வாரத்துக்குள் மனு கொடுக்கப்படும். அந்த மனுவை மத்திய மாநில அரசுகள் பரிசீலித்து 4 வாரத்துக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும் என்றனர்.

Thursday, April 29, 2010

கிட்டுவை தமிழீழம் இழந்த கதை!

நாம் இக் கட்டுரைத்தொடரில் கெடுபிடிக்காலத்துக்குப் பின்னரான காலத்து புவிசார் அரசியலில் (Post- cold war geo politics)-1990 – 2001ம் ஆண்டு காலப்பகுதிக்குள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புபட்ட முக்கியமான சில விடயங்களை தற்போது கவனத்திற்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.


நாம் எமது முதலாவது அங்கத்தில் குறிப்பிட்டவாறு மரபுசார் யத்தத்தில் ஈடுபடக்கூடிய தகைமையுடன் வளர்ச்சியடைந்திருந்த படையணிகளைக் கொண்டிருந்த தமிழர் தேசம் -

தாயகப்பகுதியில் நடைமுறை அரசினை நிர்மாணித்து – காலனித்துவ காலத்தின் பின் தமிழர்களுக்கான முதலாவது அரசாக உலகப்பந்தில் இடம்பிடிக்கும் வாய்ப்பினைக் கொண்டிருந்த தமிழீழ தேசம் -

அந்த வாய்ப்பினை ஏன் இழந்தது என்பதற்கான காரணங்களை இக் கட்டுரைத்தொடர் தேடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலை தோற்றம் பெற்றதற்கு அகப் புறக் காரணிகள் காரணமாக இருந்திருக்கின்றன.

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் தமிழர் தேசம் தன்னகத்தே கொண்டிருந்த பலங்களும் பலவீனங்களும், போராட்ட காலத்தில் – போராட்டத்துக்காக – போராட்டத்தின் பெயரால் தமிழர் தேசம் மேற்கொண்ட நடவடிக்கைளின் சாதகமான – பாதகமான விளைவுகளும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கின்றன.

இவை அகக் காரணிகள் என்ற வகையினுள் அடங்குபவை.

தமிழர் தேசத்திற்கு வெளியே – நாம் சந்தித்த, எதிர் கொண்ட பல்வேறு சக்திகளின் செயற்பாடுகளும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இத்தகைய தாக்கங்களும் தமிழீழ தேசத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கின்றன.

இவை புறக்காரணிகள் என்ற வகையினுள் அடங்குபவை.

இவ் அக புறக் காரணிகள் கட்டிப்பிடித்து அணைக்கும், முட்டி மோதித் தெறிக்கும் ஆடுகளமாக புவிசார் அரசியல்தளம் இருக்கிறது.இதனால்தான் இக்கட்டுரைத் தொடர் புவிசார் அரசியலை சுற்றிச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான அகக் காரணிகளை செழுமையாக்கிச் செப்பனிட்டிருக்க வேண்டியது தமிழர் தேசத்தின் பொறுப்பாகக் கொள்ளப்படவேண்டியது.


எமது தவறுகளுக்கு நாம் வேறு எவரையும் பெறுப்பாக்க முடியாது. அவ்வாறு செய்ய முயல்வது நேர்மையற்ற ஒரு செயலாகவே இருக்க முடியும்.

இதே வேளை தமது நலன்களுக்காக எம்மைப் பலிக்கடாக்களாக பலி கொடுக்க முனைந்த, முனைகிற புறச் சக்திகளுக்கு தமிழர் தேசம் அடிபணிந்து போக முடியாது.

இத்தகைய சக்திகளை எதிர்த்து – வளைய வேண்டிய நேரத்தில் வளைந்து – பாய வேண்டிய நேரத்தில் பாய்ந்து – நாம் முன்னொரு அங்கத்தில் குறிப்பிட்டவாறு – தனது குஞ்சுகளைப் பாதுகாக்கப் போராடும் தாய்க்கோழி போலத் தமிழர் தேசம் போராடித்தான் ஆக வேண்டும்.

ஈழத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் இவ் அக புறக்காரணிகள் தமிழீழ விடுதலப் போராட்டத்தில் ஏற்படுத்திய தாக்கங்களுடன் தொடர்புபட்டவையாக இருந்திருக்கின்றன.

இதனால்தான் இக் கட்டுரைத்தொடர் ஈழம் தோல்வி கண்டதா அல்லது தோற்கடிக்கப்பட்டதா என்ற தலைப்பினைத் தாங்கி நிற்கிறது.

ஈழம் அகக்காரணிகளால் தோல்வி கண்டதா அல்லது புறக்காரணிகளால் தோற்கடிக்கப்பட்டதா என்ற கேள்வியினை இக் கட்டுரைத் தொடர் எழுப்பி நிற்கிறது.

உண்மையில் இவ் அகப் புறக்காரணிகள் தனித்தனியே பிரித்துப் பார்க்கப்பட முடியாதவை. இப் புரிதலும் இக் கட்டுரைத் தொடருக்கு உண்டு.

சூழலில் வாழும் உயிரியினைப் போலத்தான் உலகச் சூழலுக்குள் போராட்டங்களும் வாழ வேண்டியுள்ளன. இதனால் போராட்டத்தின் அகப்புறக் காரணங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.

சூழலில் போராடும் போது ஒரு உயிரி எடுக்கும் முடிவுகள் பல தடவைகளில் அதன் உயிர் வாழ்தலுடன் மிகவும் தொடர்புபட்டிருக்கும்.

போராட்டங்களை முன்னெடுக்கும் தேசங்கள் எடுக்கும் முடிவுகளும் பல தடவைகளில் போராட்டங்களின் உயிர்வாழ்தலுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருக்கும்.

உயிரிகளில் மனிதன் ஆறறிவு படைத்தவன் என்றும் அதனால் ஏனைய உயிரிகளை விட மேம்பாடடைந்திருக்கிறான் என்றும் நாம் பல தடவைகளில் பெருமிதம் கொள்வதுண்டு.

ஆனால் இந்த மனிதகுலத்துக்குள்தான் உயிர்வாழ்வதற்காக வலியோரை எதிர்த்து வலிமை குறைந்தோர் போராட வேண்டியுள்ளது. சிறிய தேசங்களும் வலிமை மிக்க தேசங்களை எதிர்த்துப் போராட்டங்களை நடாத்த வேண்டியுள்ளது.

இக் கட்டுரைத்தொடர் குறித்த குறிப்புக்களை நிறுத்தி தொடருக்குள் இவ்விடத்திலிருந்து நுழைவோம்.

1991 ஆம் ஆண்டில் இடம் பெற்ற ராஜீவ் கொலைச் சம்பவம் ஏன் இடம் பெற்றது என்பது குறித்து நோக்கியிருந்தோம்.

அப்போது யாழ்ப்பாணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ராஜீவின் கொலைக்கு சற்ற முந்திய காலத்தும் பிந்திய காலத்துமாக நிகழ்வுகள் சிலவற்றை இவ்வங்கத்தில் நோக்குவோம்.

இந்திய இராணுவம் 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியேறிய பின்னர் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தைத் தமது முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்திருந்தனர். ஜனாதிபதி பிரேமதாசாவுடன் அப்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

1990 ஆம் ஆண்டு யூன் மாதம் யுத்தம் மீண்டும் ஆரம்பமாகிப் பேச்சுவார்த்தைகள் முறிவடைகின்றன. இரண்டாவது தமிழீழப் போர் ஆரம்பமாகிறது.

சிறிலங்கா அரசுடன் விடுதலைப்புலிகள் கொண்டிருந்த தந்திரோபாய உறவுக்கான தேவை இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்துடன் அற்றுப்போகிறது.

தமிழீழம் என்பது பேச்சுவார்த்தைகளின் மூலம் பெறக்கூடியது அல்ல என்று விடுதலைப்புலிகள் கருதியமையால் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட முறுகல் நிலைமையுடன் போரின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொள்கின்றனர்.

சிறிலங்கா அரசும் தான் விரும்பும் வகையிலான ஒரு தீர்வுத்திட்டப் பொதிக்குள் விடுதலைப்புலிகளை மூடிக்கட்ட முடியாது என்பதை உணர்ந்திருந்தமையால் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தைத் தீவிரப்படுத்துகிறது.

சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த 1989 -1990 காலத்தில் கொழும்பிலும் தெற்குப் பகுதிகளிலும் விடுதலைப்புலிகளுக்கு மரியாதையும் செல்வாக்கும் இருந்தது.

இக் காலப் பகுதியைப் பாவித்து எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தேவையான விதைகளை விடுதலைப்புலிகள் இயக்கம் தெற்கில் தூவி விட்டிருந்தது. இவ் விதைகள் இயல்பாக வளர்ச்சியடைந்து வந்து கொண்டிருந்தன

1990 – 1994 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற இரண்டாம் கட்ட விடுதலைப் போராட்டத்தில் தமிழரின் தாயகப்பிரதேசங்களுக்கு வெளியேயான – குறிப்பாக கொழும்பிலும், ஏனைய தெற்குப் பகுதிகளிலும் மேற்கொள்ளக்கூடிய இராணுவ நடவடிக்கைகளில் விடுதலைப்புலிகள் இயக்கம் கூடிய கவனம் செலுத்துகிறது.

இதற்கு பேச்சவார்த்தைக் காலத்தில் விதைத்திருந்த, விதைத்து வளர்ந்து கொண்டிருந்த விதைகள் பெரிதும் துணைபுரிபவையாய் அமைகின்றன.

இக் காலகட்டத்து இராணுவ நடவடிக்கைகளில் அரசியல் கொலைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன.

1991 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி துணை இராணுவ மந்திரியாக இருந்த ரஞ்சன் விஜேரத்னா Remote Control மூலம் இயக்கப்பட்ட ஓரு கார்க்குண்டு வெடிப்பின் மூலம் கொல்லப்படுகிறார்.

விடுதலைப்புலிகளுக்க எதிரான நேரடி, மறைமுக இராணுவ நடவடிக்கைகளை இவர் தீவிரமாக மேற்கொண்டிருந்த வேளையிலேயே இச் சம்பவம் நடைபெறுகிறது.

1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற ராஜீவ் காந்தி கொலைச்சம்பவம் குறித்து கடந்த அங்கத்தில் பார்த்திருந்தோம்.

ராஜீவ் சம்பவத்தின்பின் விடுதலைப்புலிகளின் நடவடிக்கை தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுகிறது.

இது மட்டுமன்றி இந்தியா தனது இராஜதந்திர வியூகத்தினால் சர்வதேச அரங்கிலும் விடுதலைப்புலிகள் மீதான பிடியினை இறுக்கத் தொடங்குகிறது.

இந்தியாவின் இச் சர்வதேச வியூகத்தின் முதற்பலியாக விடுதலைப்புலிகளின் முன்னாள் யாழ் மாவட்டத் தளபதியும் பின்னர் சர்வதேச கிளைகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தவருமான கிட்டு அமைந்து விடுகிறார்.

கிட்டு பிரேமதாசாவுடன் பேச்சுவார்த்தை நடாத்திய காலத்தில் – 1989 ஆம் ஆண்டு வைத்திய சிகிச்சைக்கென லண்டன் வந்தடைந்து விடுதலைப்புலிகளின் வெளிநாட்டுக்கிளைக் கட்டமைப்பை பொறுப்பெடுத்துக் கொண்டவர்.

இவர் லண்டனுக்கு வரும்போது வெளிநாட்டுக் கிளைகளின் பொறுப்பு கேபியின் கைகளிலேயே இருந்தது. கிட்டு வந்ததும் கிட்டுவும் கேபியும் தமது வேலைகளைப் பங்கிட்டுக் கொள்கின்றனர்.

வெளிநாட்டுக் கிளைகளின் நிர்வாகம், அரசியல் வேலைகள், நிதிசேகரிப்பு ஆகியன கிட்டுவின் பொறுப்பில் வருகின்றன.

சேகரிக்ப்பட்ட நிதியினைப் பொறுப்பெடுத்து விநியோகப் பணிகளை ஒழுங்கமைத்து மேற்கொள்வது கேபியின் பொறுப்பில் வருகின்றன.

கிட்டுவின் வருகை விடுதலைப்புலிகளின் சர்வதேசக் கிளைகள் வளர்ச்சியடைவதற்கு உதவுகிறது. லண்டனில் இவர் இருந்த காலத்தில் பலரையும் விடுதலைப் போராட்டத்துடன் ஒருங்கிணைப்பதற்கு பெரிதும் முயற்சி செய்கிறார்.

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை மட்டுமன்றி இவரது காலத்தில் யாழ்ப்பாணத்தில் தடைசெய்யப்பட்ட இயக்கங்களில் இருந்து தப்பி வந்திருந்த முன்னைய போராளிகளுடனும் கிட்டு தொடர்புகளை ஏற்படுத்தி போராட்டத்தின் பால் அவர்களை இணைக்க முயல்கிறார்.

மக்களை போராட்டத்துடன் இணைத்தல் என்பது படிமுறைகளைக் கொண்டது. எதிர்ப்பாளர்களை எதிர்ப்பற்றவர்களாக்குவது – அக்கறையற்றிருப்பவர்களை அக்கறை கொள்ளச் செய்வது – ஆதரவாளர்களை செயற்பாட்டாளர்களாக்குவது – ஆர்வமுள்ள செயற்பாட்டாளர்களை முழுநேரப் பணியார்களாக்குவது – என பல படிமுறைகளைக் கொண்டவகையில் போராட்டத்துடன் மக்களை இணைக்கும் பணி ஒழுங்கமைக்கப்பட வேண்டும் எனக் கிட்டு சிந்திக்கிறார்.

கிட்டுவின் அணுகுமுறை லண்டனில் பலரை ஆகர்சித்துக் கொள்கிறது. முன்னர் கிட்டு யாழ்ப்பாணத் தளபதியாக இருந்தபோது கிட்டுவைத் தெரிந்தவர்கள், கிட்டர் நிறையவே மாறி விட்டார் எனப் பேசிக் கொள்கின்றனர்.

கிட்டுவின் அணுகுமுறையாலும் அறிவுக்கூர்மையாலும் கவரப்பட்ட சட்ட அறிஞர் நடேசன் சத்தியேந்திரா விடுதலைப்புலிகளின் சர்வதேச செயலகத்தின் சட்ட ஆலோசகராக விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் இணைந்து பணிபுரிய முன்வருகிறார்.

இவ்வாறாக விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் சர்வதேச மட்டத்தில் வளர்ச்சியடையத் தொடங்குகின்றன.

1990 ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் யுத்தம் மூண்ட பின்னரும், கிட்டு மீண்டும் யுத்த நிறுத்தம், பேச்சுவார்த்தைகள் வருவதற்கு உதவுவார் என்பதானால் கிட்டுவின் இருப்பை லண்டன் சகித்துக் கொள்கிறது.

1991 ஆம் ஆண்டு மே மாதம் ராஜீவ் கொல்லப்பட்ட பின்னர் லண்டனில் கிட்டுவின் மீது அழுத்தம் அதிகரிக்கிறது. கிட்டு லண்டனை விட்டு தலைமைறவாக வெளியேறுகிறார்.

பின்னர் சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தையினை மீண்டும் ஆரம்பிக்க உதவும் தனது முயற்சிக்கு கிட்டு உதவுவார் என்ற எண்ணத்தோடு சுவிற்சலாந்து அவரை 9 மாதங்கள் அங்கு தங்குவதற்கு அனுமதிக்கிறது.

குறிப்பிட்ட காலம் முடிய கிட்டு மீண்டும் தலைமறைவாக நாடு நாடாக அலையும் நிலை ஏற்படுகிறது. ஒரு காலை இழந்தவராக மிகவும் சிரமத்தோடு கிட்டு அலைந்துழல்கிறார்.

தாயகத்தின் மீது பற்றும் பாசமும் தாயகத்தை விட்டு வெளியேறிய பின்னரே கூடுதலாகத் தெரிகிறது எனக் கூறிக்கொள்கிறார்.

வெளிநாடுகளில் விடுதலைக்காகப் பணியாற்றிய காலங்களில் தமக்கு ஏற்பட்ட மனஉணர்வுகளை தனது மனைவிக்கும் பிரபாகரனுக்கும் போராளிகளுக்கும் கடிதங்களாக வடித்துக் கொள்கின்றார்.

இவர் தனது மனைவிக்கு எழுதிய கடிதங்கள் பின்னர் புத்தகமாக வெளிவருகிறது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அரியதொரு ஆவணம் அது.

இவற்றை விட தமது மன உணர்வுகளை ஓவியமாகவும் அவர் வரைந்து கொள்கிறார்.

சிறிலங்காவுடனும் இந்தியாவுடனும் விடுதலைப்புலிகளுக்குப் பகை உறவு ஏற்பட்ட பின்னர் கிட்டுவுக்காக எந்த நாடும் கதவு திறக்கவில்லை.

தலைமறைவாக இருந்து அரசியற்பணிகளை முன்னெடுப்பது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு கிட்டு வருகிறார். இதனால் மீண்டும் தாயகம் திரும்புவது என்ற முடிவினை எடுக்கிறார்.

அதனைப் பிரபாகரனுக்கும் தெரியப்படுத்துகிறார். பிரபாகரனும் கிட்டுவின் முடிவுக்குச் சம்மதிக்கிறார். கிட்டுவினை தாயகம் அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரபாகரன் கேபியைக் கேட்டுக் கொள்கிறார்.

ஜரோப்பாவில் தனது தலைமறைவு வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மீண்டும் தலைமறைவாகத் தென் கிழக்காசிய நாடொன்றுக்குச் செல்கிறார் கிட்டு.

அங்கு கேபியைச் சந்திக்கிறார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலம் தொடர்பாகப் பல்வேறு விடயங்களை இவர்கள் பேசிக் கொள்கின்றனர்.

கேபி விடுதலைப்புலிகளின் விநியோகக் கப்பல் ஒன்றில் கிட்டுவைத் தாயகம் அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளை செய்கிறார். கிட்டுவுக்குத் துணையாக குட்டிசிறியும் சில போராளிகளும் தாயகத்தில் இருந்து வந்து சேர்கின்றனர்.

கிட்டு பயணம் செய்யும் கப்பல் பயணத்திற்குத் தயாராகிறது. இக் கப்பலில் கிட்டு பயணம் செய்கிறார் என்பதனை இரகசியமாக வைத்திருப்பதற்காக கப்பலின் தொடர்பாடல் முறையில் மாற்றம் செய்கிறார் கேபி.

உரையாடலை ஒட்டுக் கேட்கும் வாய்ப்பினைக் குறைப்பதற்காக கப்பலில் உள்ள வழமையான தொடர்பாடல் கருவிகளைப் பயன்படுத்துக்கூடாது என கப்பல் கப்டனுக்கும் பணியாளருக்கும் கேபி உத்தரவு பிறப்பிக்கிறார்.

தொடர்பாடலுக்காக அப்போது புதிதாய் வந்திருந்த சற்றலைட் தொலைத்தொடர்பு உபகரணம் ஒன்று பெறப்பட்டு அதனை இயக்கும் விதம் குறித்துப் பயிற்சியும் கப்பல் தொழில்நுட்பவியலாளருக்கு வழங்கப்படுகிறது.

கப்பலில் உள்ளோர் எவரும் கிட்டு கப்பலில் பயணிப்பதனை தொலைத் தொடர்பு ஊடகத்தினூடாகக் கரையில் இருப்பவர்களோடு பேசக்கூடாது எனவும் கேபி பணித்துக் கொள்கிறார்.

கப்பல் தனது பயணத்தை ஆரம்பித்து விட்டது.

கப்பல் பயணிக்கும் போது சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியப்படையினர் கப்பலை சந்தேகத்தில் பின் தொடர்கின்றனர். இத்தகைய பின் தொடர்கைகள் இடைக்கிடையே நடைபெறுவதுதான்.

இருந்தும் கிட்டு கப்பலில் இருப்பதால் இது பெரும் பதட்டத்தைக் கப்பல் பணியாளர்கள் மத்தியில் தோற்றுவித்து விடுகிறது. பதட்டத்தில் புதிய தொழில் நுட்பக் கருவியை அவர்களால் உரிய முறையில் இயக்க முடியாமல் போய் விடுகிறது.

கப்பலில் உள்ள வழமையான கருவியினைப் பயன்படுத்தி அவர்கள் தொடர்பாடலை மேற்கொள்கின்றனர். நிலைமை சிக்கல் அடைந்தமையால் கிட்டுவும் கட்டளைப் பொறுப்பைத் தனது கையில் எடுத்துக் கொள்கிறார். இந்தியப்படையினர் உரையாடலை ஒட்டுக் கேட்டு கிட்டு கப்பலில் இருப்பதனை உறுதி செய்து கொள்கின்றனர்.


இதற்கிடையில் இந்தியக் கடற்படையின் பின்தொடர்கையினை நிறுத்துவதற்கு இந்திய அரசியல் மட்டத்தில் சில முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தால் கோபடைமந்திருந்த இந்திய அரச தரப்பிடமிருந்து சாதகமான பதிலேதும் இல்லை.

கப்பலைச் சரணடையுமாறு இந்திய கடற்படையினர் தொடர்ந்து கூறிக் கொண்டு பின் தொடர்ந்து கொண்டிருந்தனர். இரண்டு நாட்களாக இப் பின் தொடர்வு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு கட்டத்தில் கிட்டுவே நேரடியாக இந்திய கடற்படையதிகாரிகளுடன் பேசுகிறார். சரணடைய முடியாது என்பதனை எடுத்துச் சொல்கிறார். தாம் விடுதலைப் போராளிகள் என்பதனையும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதனையும் எடுத்துக் கூறுகிறார். தமது பயணத்தைத் தொடர அனுமதிக்கும்படியும் கோருகிறார்.

இந்தியக் கப்பற்படை தமது கப்பலை நெருங்க முனைந்தால் கப்பலையும் தகர்த்து தாமும் தற்கொலை செய்து கொள்வோம் என உறுதியாகக் கூறுகிறார்.

இந்தியப்படையினர் கேட்பதாக இல்லை. தொடர்ந்து கப்பலை நெருங்கி வந்து கொண்டிருந்தனர்.

கிட்டு தனது இறுதி எச்சரிக்கையினையும் விடுத்து விடுகிறார். இந்தியப்படையினர் பின்வாங்குவதாக இல்லை.

கப்பல் பணியாளர்களை கப்பலில் இருந்து வெளியேறுவதற்கான உத்தரவுகளைக் கொடுத்து விட்டு கப்பலைத் தகர்ப்பதற்கும் தாம் குப்பிகளைக் கடித்துக் கொள்வதற்கு கிட்டுவும் குட்டிசிறியும் ஏனைய போரளிகளும் முடிவு செய்து கொள்கின்றனர்.

இந்தியக் கப்பல் மேலும் நெருங்குகிறது. கப்பல் பணியாளர்கள் படகு மூலம் வெளியேற்றப்படுகின்றனர்.

கப்பலைத் தகர்ப்பதற்கான உத்தரவினைக் கிட்டு பிறப்பிக்கிறார். கப்பல் தகர்கிறது.


இப்படியாகத்தான் கிட்டுவை 16.01.1993 அன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் இழந்தது. கிட்டு தாயகம் போய்ச் சேர்ந்திருந்தால் அது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு பலவிதங்களில் பலம் சேர்த்திருக்கும்.

களத்திலும் புலத்திலும் நேரடி அனுபவம் உள்ள – பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் – வலது கையாக இருக்கக்கூடிய ஒரு தளபதி மீண்டும் போய்ச் சேர்ந்திருப்பாராயின் விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாடுகள் அவரது பொறுப்பிலேயே இருந்திருக்கும்.

அனுபவத் தெறிப்புடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சர்வதேச உறவுப்பரப்பினை விரித்திருந்திருக்க முடியும்.

ஆனால், அந்தக் கொடுப்பினை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு கிடைக்கவில்லை.



தொடரும்…



- நன்றி: பொங்குதமிழ்
http://www.nerudal.com/

Wednesday, April 28, 2010

தமிழீழ தேசத்தின் விடிவுக்காக தம்மை அர்ப்பணித்தோரது குடும்பங்கள் பிச்சை எடுக்கும் நிலை!

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள் நாளாந்த உணவிற்கு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றனர் என மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடும்பத்தலைவர்களில் பெருமளவானோர் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவான குடும்பத்தலைவர்கள் போரில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்துள்ளனர்.

இந்த நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்டுவந்த நிவாரணக் கொடுப்பனவுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டு நிவாரண அட்டைகளும் மீளப் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

கணவன்மார்கள் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவான கணவன்மார்கள் போரில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்துள்ளனர். இந்த நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்டுவந்த நிவாரணக் கொடுப்பனவுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டு நிவாரண அட்டைகளும் மீளப் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தாய்மார்கள் தங்களது பிள்ளைகளுக்கு உணவு வழங்கமுடியாமலும், குழந்தைகளுக்கு பால்மா, உணவுகளுக்காக வீடுவீடாகச் சென்று கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பேரவலம் நிலவிவருகின்றது.

தமக்கு உதவி வழங்குமாறு கிழக்கு மாகாண சபையினர், அரச அதிபர், பிரதேச செயலர்கள் உட்பட்ட அதிகாரத்தில் உள்ள அனைவரிடமும் தொடர்பு கொண்ட போதிலும் தமக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என சம்பத்தில் பாதிக்கப்படுகின்ற பெண்கள் கண்ணீர்விட்டு கதறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பங்களே வன்னியில் வாழ்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குறிப்பிட்ட குடும்பங்களுக்காவது யாராவது புலம்பெயர் அமைப்புக்கள் உதவ முன்வருவார்களா?

http://www.nerudal.com/

Tuesday, April 27, 2010

காயமடைந்த படையினரை கைவிட்டுள்ளது: சிறிலங்கா

சிறிலங்கா அரசு தனது போர் வெற்றியை தொடர்ச்சியாக கொண்டாடி வருகின்றது ஆனால் அதில் இறந்த மற்றும் காயமடைந்த தனது படையினரை அரசு கைவிட்டுள்ளதாக தொன்னிலங்கை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

இடம்பெயர்ந்த தமிழ் மக்களை புறம்தள்ளியதை போலவே சிறிலங்கா அரசு காயமடைந்த தனது படையினரையும் கைவிட்டுள்ளது. சிறீலங்கா அரசு தொடர்ச்சியாக போர் வெற்றியை கொண்டாடி வருகின்றது. ஆனால் கடந்த மூன்று வருடங்கள் நடந்த கடுமையான போரில் கொல்லப்பட்ட 6,200 படையினரின் குடும்பங்களையும், 30,000 இற்கு மேற்பட்ட காயமடைந்த படையினரையும் அது கைவிட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் பெருமளவானோர் அவயவங்களை இழந்துள்ளனர். பார்வையையும், கேட்கும் சக்தியையும் இழந்துள்ளனர். 300 இற்கு மேற்பட்டவர்கள் தமது இயங்கும் சக்தியை இழந்துள்ளனர்.

போரின் இறுதிக்கட்டத்தில் கடந்த இரு வருடங்களில் சிறிலங்கா இராணுவத்தில் 80,000 பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர். பெரும் தொகையான படையினரை இணைத்துக் கொண்டதனால் தான் போரில் வெற்றிபெற முடிந்ததாக அரசு தெரிவித்துள்ளது.

தென்னிலங்கையில் உள்ளவர்களின் வேலையில்லா பிரச்சனைகளுக்கு அது ஒரு தீர்வாகவும் இருந்தது என 1991 ஆம் ஆண்டு இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் தனது கால் ஒன்றை இழந்த ஆனந்த தென்னகோன் (40) தெரிவித்துள்ளார்.

இறந்த அல்லது காணாமல்போன படையினருக்கு அரசு காப்புறுதி நிதி மூலம் 750 அல்லது 1,200 டொலர்களை வழங்கி வருகின்றது. அதன் பின்னர் அவர்களின் உறவினர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகின்றது. காயமடைந்த படையினருக்கும் காப்புறுதி நிதியும், ஊதியங்களும் வழங்கப்படுகின்றன. ஆனால் அவை மருத்துவச் செலவுகளுக்கு போதுமானதல்ல.

தனக்கு தேவையான சிறப்பு சக்கர வண்டியை பெறுவதற்கு 10 மில்லியன் ரூபாய்கள் (90,000) டொலர்கள் தேவை அதனை உள்ளூர் நிறுவனங்கள் தயாரிப்பதில்லை என காயமடைந்த படை சிப்பாய் மஞ்சு லக்ஸ்மன் (32) தெரிவித்துள்ளார்.

ஊனமுற்ற படையினரை பராமரிப்பதே தமது முதல் பணி என இராணுவத்தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார். ஆனால் அவர் காணாமல் போன படையினர் தொடர்பாக அவர் எதனையும் தெரிவிக்கவில்லை.

காணாமல்போன படையினரின் எண்ணிக்கைகள் இறந்த படையினரை விட அதிகமாகும்.

2008 ஆம் ஆண்டுக்கான சிறீலங்காவின் பாதுகாப்பு செலவீனம் 1.6 பில்லியன் டொலர்களாகும். அது கடந்த ஒக்டோபர் 20 விகிதத்தால் அதிகாரித்துள்ளது. காயமடைந்த படையினரை பராமரிப்பது, இறந்த படையினருக்கு நிதிகளை வழங்குவது, இராணுவத்தின் பலத்தை தக்கவைப்பது போன்ற விடயங்களால் சிறீலங்காவின் பாதுகாப்பு செலவீனம் அதிகரித்துள்ளது.

இராணுவம் 10 மில்லியன் டொலர்களை உலகம் முழுவதும் பரந்து வாழும் சிங்கள மக்களிடம் திரட்டிய போதும் அது சில டசின் குடும்பங்களுக்கே போதுமானது.

எனது குடும்பம் மிகவும் வறுமையானது, அவர்களால் என்னை பராமரிக்க முடியாது என கழுத்திலும், முள்ளம்தண்டிலும் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்த கப்டன் தனுஷ்கா பெரேரா (33) தெரிவித்துள்ளார். அவர் ராகம வைத்தியசாலையில் தங்கியுள்ளர்.

எனது பெற்றோர்கள் எனது ஊதியத்தில் தான் வாழ்ந்து வருகின்றனர். நாம் செங்கற்களால் கட்டப்பட்ட வீட்டில் கூட இதுவரை வாழ்ந்ததில்லை, எனக்கு சென்று தங்குவதற்கு இடமில்லை அதனால் வைத்தியசாலையில் தொடர்ந்து தங்கியுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே மகிந்த ராஜபக்சாவின் எதிர்காலத் திட்டங்கள் அவர் எதிர்கொள்ளப் போகும் சவால்களை சந்திப்பதற்கு போதுமானவை அல்ல என அவை மேலும் தெரிவித்துள்ளன.

Tamils protest Amitabh Bachchan's proposed visit to Sri Lanka

Hundreds of Tamils on Sunday protested outside the bungalow of Bollywood superstar Amitabh Bachchan, shouting slogans against his decision to visit Sri Lanka as chief guest for the India International Films Awards (IIFA) function in July.
"We urge him not to attend the function in Colombo as a symbol of solidarity for the Tamilian cause in Sri Lanka. Tamils have been subject to atrocities and war crimes perpetrated by the Mahinda Rajapaksa government in that country," C. Rajendran, spokesperson for the protesters said.

The protesters marched from Bachchan's Pratiksha bungalow to his Jalsa residence, where a delegation met him and two IIFA office bearers, who assured the representatives that they would convey the sentiments of Tamils to the IIFA governing board and take a suitable decision.

Later, Rajendran told mediapersons that the Sri Lankan government had allegedly killed over 1.5 lakh Tamils during its war with the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in the last couple of years. He claimed that over 3.5 lakh Tamils continue to face a "hostile administration" in that country.

Sunday, April 25, 2010

''இந்திய வீடுகளில் குடியிருக்கும் சிங்களவன்!''...Vikatan Article

மே மாதம் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கின்றன! நெஞ்சில் கொஞ்சம் இரக்கத்தையும் ஈரத்தையும் வைத்திருப்பவர்கள் அத்தனை பேரையும் ரத்தக் கண்ணீர் வடிக்கவைத்த ஈழத்துக் கொடூரங்கள் அரங்கேறி ஓராண்டு முடியப்போகிறது. இறந்து மண்ணுக்குப் போனவர் எண்ணிக்கைகூட முழுமையாக இன்னமும் எடுக்கப்படவில்லை. மனரீதியாக இறந்துபோய் நாட்களை நகர்த்திக்கொண்டு இருப்போர் நிலை குறித்தும் முழுமையாக அறிய முடியவில்லை. ஆனால், அவர்கள் இரண்டு தேர்தலை நடத்தி முடித்துவிட்டார்கள். கோமா நிலையில் கிடக்கும் ஈழத்தின் இன்றைய நிலவரங்கள் குறித்து அறிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனைச் சந்தித்தோம்...

''ஈழத்துக் கொடூரங்கள் நடந்து முடிந்து ஓராண்டு ஆகப்போகிறது. என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்பட்டுஉள்ளன?''

''கொடூரங்கள் நடந்து முடியவில்லை. இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஈழத் தமிழர் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. ஏமாற்றமே இன்னமும் தொடர்கிறது. மேலும் மேலும் துன்பம் அதிகமாகி வருகிறது. முள்வேலி முகாமில் இருந்த மக்களை உலக நிர்பந்தத்துக்குப் பயந்து விடுவிப்பதாக ராஜபக்ஷே கூறினார். முழுமையாக விடுவிக்கவில்லை. ஒரு பகுதி மக்களையே விடுவித்துள்ளார். விடுவிக்கப்பட்டவர்களும் தங்களது ஊருக்குப் போனால் அவர்கள் வீடுகள் எல்லாம் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டு உள்ளன. எனவே, இருப்பதற்கு இடம் இல்லாமல் பள்ளி, கோயில்களில் அடைக்கலம் புகுந்தார்கள். அவர்கள் தங்களது சாப்பாட்டுக்காக விவசாயம் பார்க்கவோ மீன் பிடிக்கப் போகவோ சிங்கள ராணுவம் அனுமதிக்க மறுக்கிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள், 'வன்னிப் பகுதியில் ஏராளமான ராணுவ முகாம்கள் இருப்பதால் தமிழ்ப் பெண்கள் வெளியே நடமாட அஞ்சுவதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

முகாம்களில் இருப்பவர் களுக்கும் அளிக்கப்பட்டு வந்த உதவிகள் அரைகுறையாகவே கிடைக்கின்றன. சுதந்திரமாக நடமாடலாம் என்று இவர் களுக்கு சொல்லப்பட்டு இருந் தாலும், எங்கு போவது என்று தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறான் தமிழன். முகாம்களில் இல்லாத தமிழர்கள், சிங்கள ராணுவம் மற்றும் டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற குழுக்களால் அதிகமான துன்பங்களை அனுபவிக்கிறார்கள். இதைவிடக் கொடுமையான செய்தி என்னவென்றால், இந்திய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்காகக் கொடுத்த 1,000 கோடி ரூபாய் பணத்தில் கட்டப்பட்ட வீடுகளில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகிறார்கள். அவர்களுக்காக புத்தக் கோயில்கள் அமைக்கப்படுகின்றன. சிங்களப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்க் குழந்தைகள் சிங்களம் படித் தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. தமிழ்ப் பெயர் தாங்கிய ஊரின் பெயர் கள் சிங்களமாக மாற்றப் படுகின்றன. அதாவது, தமிழ்ப் பகுதிகள் என்று இலங்கையில் எதையும் சுட்டிக் காட்டிவிடக் கூடாது என்பதற்கான வேலைகள்தான் இந்த ஓராண்டு காலத்தில் நடந்து முடிந்திருக்கின்றன!''

''ஜனாதிபதி தேர்தலில் வென்றது மாதிரியே நாடாளுமன்றத் தேர்தலிலும் ராஜபக்ஷே வென்றிருக்கிறார். இந்தத் தொடர் வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் 70 சதவிகிதத் தமிழர்கள் இந்தத் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார்கள். அதாவது, சிங்கள தேசத்தின் இனவாத அரசியலுக்குள் எமது நலன்களைத் தேட நாங்கள் விரும்பவில்லை என்பதைத்தான் இந்தப் புறக்கணிப்பின் மூலம் தமிழர்கள் உலகத்துக்கு அறிவித்திருக்கிறார்கள். பொதுவாகவே, இலங்கையில் இதுவரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் 75 சதவிகித வாக்குகள் பதிவாகும். ஆனால், வரலாற்றில் முதன்முறையாக 55 சதவிகித வாக்குகள்தான் பதிவாகி உள்ளன. தமிழ் மக்கள் மட்டுமல்ல; சிங்கள மக்களும் இந்தக் கேலிக்கூத்தான நடைமுறைகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன!''

''ஃபொன்சேகா, தனது தொகுதியில் வெற்றிபெற்றுள்ளாரே?''

''ராஜபக்ஷே, ஃபொன்சேகா மோதலின் விளைவாக சிங்கள மக்கள் பிளவுபட்டு உள்ளார்களே தவிர, தமிழர்களுக்கு இதனால் எந்த ஆதாயமும் கிடைக்கப்போவது இல்லை. கடந்த ஆண்டின் இதே ஏப்ரல் மாதங்களில் நடந்த கொடுமைகளுக்கு அவர்கள் இருவரும்தானே காரணம். இவர்களின் மோதல் என்பது தேர்தல் மோதலாக மட்டும் நின்றுவிடாது. ராணுவத்துக்கும் மோதல் வெடிக்கும் அபாயம் இருக் கிறது. ஃபொன்சேகாவுக்கு ஆதரவான ராணுவ அதிகாரிகள் பதவியில் இருந்து விலக்கப்பட்டு உள்ளனர். இது ராணுவத்தினர் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் ஃபொன்சேகா ஒரு உறுப்பினராக வென்றிருந்தாலும் அவரை நாடாளு மன்றத்துக்குள் வர அனுமதிக்க மாட்டார்கள். 1980-களின் முதற் பகுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த டெலோ தலைவர் குட்டிமணி, சிறையில் இருந்தபோதே வட்டுக்கோட்டை தொகுதி உறுப்பி னராக நியமனம் செய்யப்பட்டார். ஆனால், அவரை நாடாளுமன்றம் செல்வதற்கு அனுமதிக்காமல் கொலை செய்துவிட்டார்கள். இந்தக் கதி ஃபொன்சேகாவுக்கும் ஏற்படலாம்!''

''இதையெல்லாம் உலக நாடுகள் அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருக்கக் காரணம்?''

''வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை, சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுத்தாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது என்பதுதான் உண்மை. போர்க் குற்றவாளியாக ராஜபக்ஷேவை மேற்கு நாடுகளும் ஐ.நா-வும் குற்றம் சாட்டி வருகின்றன. அதில் இருந்து தப்புவதற்கு அவர் பெருமுயற்சி செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கூடிய நிரந்தர மக்கள் நீதிமன்றம் என்ற அமைப்பு நடத்திய விசாரணையின் இறுதியில் வழங்கப் பட்ட தீர்ப்பில் 'ராஜபக்ஷே போர்க் குற்றவாளியாக விசாரிக்கப்பட வேண்டியவர்' என்று தெளிவாகத் தீர்ப்பளித்து உள்ளது. இந்தத் தீர்ப்புக்கு பிறகு, பிரிட்டிஷ் அரசாங் கம், 'நாங்கள் இலங்கைக்கு இதுவரை ஆயுதம் வழங்கியதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம். இனி வழங்க மாட்டோம்' என்று மன்னிப்பு கேட்டுள்ளது.

இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் ஆயத்த ஆடைகளுக்கு இதுவரை கிடைத்து வந்த வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் ரத்து செய்துள்ளது. உலக நாடுகள் இந்தக் கொடூரத்தை உணர்ந்துள்ளன. ஆனால், இந்தியாதான் இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவும் ராணுவரீதியாகவும் உதவி செய்துவருகிறது. இந்தியக் கடற்படைக் கப்பல்கள் திரிகோணமலைக்குச் சென்று சிங்கள கடற்படைக்கு பயிற்சி அளித்து வருகிறது. தமிழ் மீனவர்களைக் காப்பாற்ற வக்கற்ற இந்தியக் கடற்படைக்கு ஏன் இந்த வீண் வேலை? இந்திய அரசும் கருணாநிதி அனுப்பிய தூதுக் குழுவும் தவிர, உணர வேண்டியவர்கள் அனைவரும் ஈழத்துக் கொடுமையை உணர ஆரம்பித்துஇருக்கிறார்கள்!''

''சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் இந்த ஓராண்டு காலத்தில் அதிகமாகி இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?''

''இலங்கையில் சீனா அதிகமாகக் காலூன்றுவது இந்துமாக் கடல் மார்க்கம் அவர்களது கட்டுப்பாட்டில் போவதற்குத்தான் வழிவகுக்கும். இதை மேற்கு நாடுகள் விரும்பவில்லை. அவர்களைவிட இது இந்தியாவுக்குத்தான் பெரும் ஆபத்தாக முடியும். ஏற்கெனவே, இந்தியா வைச் சுற்றி உள்ள நேபாளம், மியான்மர், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் சீனா பலமாக வேரூன்றிவிட்டது. பாகிஸ்தானும் நெருங்கிய கூட்டாளி ஆகி விட்டது. எஞ்சியிருந்த இலங்கை யும் சீனாவின் பக்கம் சாய்ந்து விட்டது. இந்தியாவைச் சுற்றி சீனா உருவாக்கி வரும் பேராபத்தை டெல்லியில் உள்ளவர்கள் உணரவில்லை. 'சீனாவைவிட நான் அதிகமாக உதவிகள் செய்கிறேன்' என்று இந்தியா கையாளும் தந்திரம் தற்கொலைக்குச் சமம். இந்தியாவைத் தனது நேசநாடாக ராஜபக்ஷே எப்போ தும் நினைக்க மாட்டார். அதை டெல்லி எவ்வளவு விரைவாக உணர்கிறதோ அது நம்முடைய நாட்டுக்கு நல்லது!''

''விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று இயங்குகிறதா?''

''ஈழத் தமிழர் பிரச்னை இன்று உலகளாவிய பிரச்னையாக இருப்பதற்கு பிரபாகரனும் விடுதலைப் புலிகள் இயக்கமும் செய்துள்ள தியாகம்தான் காரணம். 30 ஆண்டுகாலம் புலி கள் நடத்திய போராட்டத்தால் தான் தமிழர்கள் பாதுகாக்கப் பட்டனர். 2 லட்சம் தமிழர்கள் உயிர் இழந்தும், 45 ஆயிரம் புலிகள் வீர மரணத்தைத் தழுவியும், 10 லட்சம் தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ முடியாமல் அகதிகளாக வெளி ஏறியும், 5 லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே எல்லா வற்றையும் இழந்து தவித்த ஈழத்து சோகம் சொல்லி மாளாது. ஆனாலும், தங்கள் துன்பத்துக்குத் தமிழீழமே தீர்வு என்பதைத் தமிழர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இப்போது நடந்திருப்பது தற்காலிகப் பின்னடைவு என்றுதான் கருதுகிறார்களே தவிர, எல்லாம் முடிந்துவிட்டது என்று எவரும் நினைக்கவில்லை. புலிகளை அழித்துவிட்டோம் என்று கொக்கரிக்கிற ராஜபக்ஷே, கூடுத லாக ஒரு லட்சம் பேரை ராணுவத்தில் சேர்க்கிறார். ஆயுதங்களை வாங்கிக் குவிக்கிறார். புலிகள் அமைப்பு இயங்குகிறது, முன்னிலும் பலமாக இயங்குகிறது, அடுத்த தாக்குதலை அவர்கள் ஆரம்பித்தால் அது பலமானதாக இருக்கும் என்பது ராஜபக்ஷேவுக்குத் தெரியும்!''

''ஏற்கெனவே கேட்கப்பட்டதுதான்... பிரபாகரன் இருக்கிறார் என்று இன்னமும் எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?''

''பிரபாகரனின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து கிடைத்து வந்த தகவலை வைத்துதான் நான் உறுதியாகக் கூறுகி றேன்.

பிரபாகரன் உள்பட முக்கியத் தளபதிகளை ஒழித்துவிட்டதாக ராஜபக்ஷே சொல்வதை சிங்கள மக்களே நம்பவில்லை. இன்னமும் அவர்களுக்கு அச்சம் இருக்கிறது. பிரபாகரன் தலைமையில் அந்தப் போராட்டம் எந்த நேரத்திலும் வெடிக்கலாம். எப்போது எந்தக் காலகட்டத்தில் என்பதை பிரபாகரன் மட்டுமே முடிவு செய்ய முடியும். உற்ற தருணம் நோக்கி அவர் காத்திருக்கிறார். அந்தக் காத்திருப்பு வீண் போகாது!''

சலனமின்றிச் சொல்லி முடிக்கிறார் பழ.நெடுமாறன்!

ஐஸ்வர்யா ராய் படத்தை புறக்கணிப்போம்: அமிதாப் வீட்டு முன்பு நாளை போராட்டம்: இலங்கை செல்ல மறுத்த ரஜினி, கமலுக்கு நன்றி: சீமான்

இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கு ஐஸ்வர்யா ராய் சென்றால் அவரது படங்களை புறக்கணிப்போம் என்றும், அமிதாப் வீட்டு முன்பு நாளை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,
இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா ஜூன் மாதம் நடத்தப்படுவதாக அறிந்தோம். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை நடிகர் அமிதாப்பச்சன் முன்னின்று கவனித்து வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.

அமிதாப்பின் மருமகள் ஐஸ்வர்யாராயும் இந்த விழாவில் பங்கேற்க இருப்பதாக கேள்வியுறுகிறோம். இதற்காக மனவருத்தப்படுகிறோம். தமிழ் ரசிகர்கள் முழுமையாக அவரை நேசிக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் இந்த விழாவில் அவர் பங்கேற்பது தமிழ்க்கலைஞர்களின் உணர்வுகளுக்கு எதிரானது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

விழாவில் பங்கேற்பதை அவர் நிராகரிக்க வேண்டும். தமிழர்கள் மற்றும் தமிழ்க்கலைஞர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இவ்விழாவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

தமிழர்களின், தமிழக்கலைஞர்களின் உணர்வை புரிந்து கொள்ளாமல் அமிதாப், ஐஸ்வர்யா ராய் இருவரும் இவ்விழாவில் பங்கேற்பார்களேயானால் ஐஸ்வர்யா நடித்துள்ள படத்தை ஒட்டுமொத்த தமிழர்களும் புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் ஐஸ்வர்யா ராய் நடித்த படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அவரது படத்தை பார்க்காமல் புறக்கணிப்பார்கள்.

தமிழர்களின் மரணச் செய்தி தினமும் வந்து கொண்டிருக்கின்ற வேளையில் தமிழர்கள் கண்ணீர்க்டலில் மிதக்கும் நேரத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை மகிழ்விக்க இத்தகைய ஒரு விழா நடத்தப்படுவது தேவைதானா என்று அமிதாப் பச்சன் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.

தமிழர்களின் ஆதரவில் வசதி வாய்ப்புகளை தேடிக்கொண்ட ஐஸ்வர்யா ராய் தமிழர்களின் உணர்வுகளுக்கு மாறாக நடந்து கொள்ளக்கூடாது.

எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், இதற்கு முன் உதாரணமாக மும்பையில் உள்ள அமிதாப் வீட்டு முன்பாக நாம் தமிழர் இயக்கம் சார்பில் நாளை காலை முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் மும்பையில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாம் தமிழர் இயக்க தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று கூறியுள்ளார்.

இலங்கை செல்ல மறுத்த ரஜினி, கமலுக்கு நன்றி

தமிழர்கள் கண்ணீர் கடலில் மிதக்க இலங்கையில் ராஜபக்சேவை மகிழ்விக்க சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்துவதா என்று அமிதாப்பச்சனுக்கு இயக்குனர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அமிதாப் அழைப்பை புறக்கணித்த ரஜினி, கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சீமான்.

இதுகுறித்து சீமான் மேலும் கூறியதாவது,

இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா ஜூன் மாதம் நடத்தப்படுவதாக அறிந்தோம். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை நடிகர் அமிதாப்பச்சன் முன்னின்று கவனித்து வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.

இவ்விழாவில் பங்கேற்க கமல், ரஜினி இருவருக்கும் அமிதாப் விடுத்த அழைப்பை அவர்கள் இருவரும் புறக்கணித்துவிட்டதாக செய்தி வருகிறது. இவ்விழாவில் பங்கேற்க மறுத்த அந்த இரு கலைஞர்களுக்குக்கும் அனைத்து தமிழ்க்கலைஞர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்க்கலைஞர்கள் யாரும் இவ்விழாவுக்கு போகக்கூடாது என்று அனைத்து தமிழ்க் கலைஞர்களும் எதிர்பார்க்கிறார்கள். இதே காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாளும் நமக்கு இலங்கையில் இருந்து மரணச் செய்தியாகத்தான் வந்து கொண்டிருந்தன. அங்கு தமிழர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.

சென்ற ஆண்டு இதே நாளில் நடந்த நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவத்தை மறக்கடிக்க திட்டமிட்டு இந்த விழா நடத்தப்படுவதாகவே கருதுகிறேன். இன்றைக்கும் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் முள்வேலிக்கு மத்தியில் கடும் சித்ரவதைக்கு ஆளாகி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

Saturday, April 24, 2010

Senior ex-LTTE cadres under pressure to confess

Colombo Establishment has subjected hundreds of senior Liberation Tigers of Tamil Eelam (LTTE) cadres in its custody to confess to alleged accusations of war crimes, promising that a general amnesty would be granted sooner to those who confess, informed legal sources in Colombo told TamilNet Friday. The move, backed by Indian advice, comes as the Rajapaksa government secured majority of seats in Sri Lankan parliament. Concerned legal sources urged Diaspora Tamils to take meaningful action in arranging legal assistance to the victims through independent and reliable sources without allowing Indian or Colombo backed legal practitioners to victimise the detained cadres.

Sri Lankan officials have approached legal firms and their contacts in certain organisations to provide 'legal assistance' to the family members of the LTTE members in custody by advising them to confess to the alleged charges, being furnished by the Sri Lankan military.

The legal sources further said that there was hardly any evidence in many of the cases and that many of the victims would benefit from not yielding to the pressure being exerted on them if they receive proper legal assistance from independent sources without political influence.

Meanwhile, Malaysia, on Friday claimed for the first time that it had detained several key members of the Liberation Tigers of Tamil Eelam and deported many of them to Sri Lanka between August 2009 and March 2010, New Straits Times reported from Kuala Lumpur

Liberation Tigers’ Ira’naimadu runway used exclusively by Indian Air Force

The runway constructed by Liberation Tigers of Tami Eezham (LTTE) in Ira’naimadu in Ki’linochchi has been handed over to the exclusive use of Indian Air Force (IAF), according to sources close to a section of Sri Lanka Air Force (SLAF) personnel who have expressed their disapproval of this course of action by Sri Lanka government. The area in which this runway is located in Ira’naimadu falls within the High Security Zone (HSZ) and is strictly out of bounds for low ranking SLA personnel, the sources added. IAF officers fly routinely between Tamil Nadu and Ira’naimadu besides training SLAF personnel at I’ra’naimadu, the sources said.

The runway constructed by LTTE in I’a’naimadu in a strategic jungle area in Ki’linochchi had been considered an extraordinary feat by many military analysts.

Recently some persons lost their lives when they were engaged in constructing a communication tower in Ira’naimadu.

It is reliably understood that these men died working on the project where communication towers were to be erected in Kurunakar and Point Pedro in Jaffna peninsula to function along with the communication tower in Ira’naimadu with the aim to develop communication technology and facilities between Tamil Nadu and Ki’linochchi.

Some local communication agencies are also said to be offering their assistance to this project.

So far the uprooted civilians from Vanni had not been permitted to resettle in Ira’naimadu area or most of the area east of A9 road, sources in Vanni said.

புலி உறுப்பினர்களை மலேசியா இலங்கைக்கு நாடு கடத்தியது இப்போது ஒப்புக்கொள்கிறது அந்த நாடு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குப் பின்னர் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனரென அந்நாட்டு அரசு பகிரங்கமாக நேற்று அறிவித்தது.


புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவுக்குப் பின்னர் அந்த இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரையும் தாங்கள் கைது செய்து நாடு கடத்தி உள்ளார்களென மலேசிய உள்துறை அமைச்சர் ஹிஸாமுடீன் குஷெய்ன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஒகஸ்ட் மாதத்துக்கும் மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஏராளமான புலிகளைத் தாங்கள் கைதுசெய்து நாடு கடத்தினர் எனவும், மலேசிய அரசின் இந்நடவடிக்கையை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பெரிதும் பாராட்டினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் அந்த அறிக்கையில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட புலிகள் பற்றிய விவரங்கள் எவையும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அதேநேரம், மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் மேஜர் ஜெனரல் ஜி.வி.டி. யூ. ஏ. பெரேரா உள்துறை அமைச்சரின் இவ்வறிக்கை குறித்து கருத்துக்கூற மறுத்துள்ளார்.

ஆனால் பெயர் குறிப்பிட விரும்பாத மலேசிய உயரதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குக் கருத்துக் கூறுகையில், புலிகளின் முக்கிய பெருந்தலைவர் ஒருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார் என்றார்.

இருப்பினும், அப்புலித் தலைவரின் பெயரைக் குறிப்பிட அவர் மறுத்துவிட்டார்.

புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான கே.பி. எனப்படும் கே. பத்மநாதன் கடந்த ஆகஸ்ட் மாதம் கோலாலம்பூரில் வைத்து கைதுசெய்யப்பட்டு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டாரென நம் பப்படுகின்றது.


http://www.tamilwin.com/

Wednesday, April 21, 2010

Will Sri Lankan Government Release KP?

The Indian Multi Disciplinary Monitoring Agency (MDMA) which is investigating the possible conspiracy behind the assassination of Rajiv Gandhi has recently informed that it has need to investigate KP, the former leader of the Tamil Tiger International chain presently under detention in Sri Lanka


Prior to this, India’s RAW (Reasearch and Analysis Wing- intelligence service) came to Sri Lanka and questioned KP. The latter however during the investigation denied having any involvement in the Gandhi assassination while citing evidence. But, the RAW had not accepted KP’s denial in full, and registered strong protests against some of his statements, sources say.

Now, India’s MDMA has informed Sri Lankan authorities that it has to interrogate KP in the midst of the emergence of two divergent views within the Sri Lankan Terrorist Investigation UNit regarding the action to be instituted against KP: One view favours filing of legal action against KP and producing him before the Court.

The other view is, KP shall be released.

The protagonists of the latter view argue, as KP formed the Tamil Tiger Diaspora for the war, so he should be given the opportunity to induce the Diaspora to come to the path to peace, and their mentality can be changed only by KP.

It is reported that KP has advanced many proposals in regard to roping in the Tamil Tiger Diaspora to the path to peace.

He has advanced these proposals after having discussions with certain representatives of the Tamil political parties in the North- East and those of the Tamil Diaspora .

Moreover, representatives of some Tamil political parties had met KP on several occasions, and the latter is in communication with the Tamil Diaspora too over the phone.

It is learnt that he has put forward proposals for the development of the North –East provinces via the investments of the Tamil Diaspora .

The Government. however has still not decided on the course of action in respect of KP. The Government. entertains apprehensions that KP is not entirely trustworthy and is possibly trying to exploit this opportunity to join hands with the Tamil Tiger Diaspora again.

Incidentally , the popular story that the Tamil Tiger Diaspora which opposed the appointment of KP as the Tamil Tiger leader, gave the tip-off for the arrest of KP is a myth and not the truth. That was a story invented to sow disaffection among the Diaspora.

The Government planned to arrest KP even while Prabhakaran was living. The reason for this is the Government’s perception that KP was seeking to rescue Prabhakaran, and therefore the former should be destroyed before that .

The Government became aware only after the arrest of KP that the latter had planned to dig a tunnel under the sea in order to dispatch Prabhakaran via a Submarine. Prabhakaran was to be fetched to a ship where a helicopter was to land and take off whisking away Prabhakaran.


During the final phase of the war , although the Government tried to arrest KP, that proved futile.

Later, the Govt. succeeded because of KP’s indiscretions and his conduct in neglect of personal security, and it was not because of the Tamil Tiger Diaspora conflicts.

Although there was a proposition during the period of the last Presidential election to release KP and allow him to participate in politics in the North and East , the Govt. was in two minds based on its fear for KP on the one hand and its inclination to release him on the other.

The Indian Intelligence service sees the release of KP in a different light. It is apparent that they are in disfavour of the release of K.P. It is on this account the MDMA has intimated that it requires to question KP while India’s RAW secret service has already once earlier, interrogated him in connection with the Rajiv Gandhi murder.

There are also reports that they are desirous of delving into KP’s Bank accounts. India’s CBI in 2002 had gone to New Zealand and Germany to investigate the Bank account details of KP in those countries, reports say.

Indeed,the CBI has had correspondence and exchanged documents with 23 countries in an effort to get details in connection with KP’s Bank accounts.

The RAW secret service while interrogating KP was only investigating his involvement in the Gandhi murder. Yet , the MDMA is of the view that there could have been a conspiracy behind the Gandhi murder , and KP has to be questioned in that angle.

This conspiracy claim can imply an International conspiracy. Their objective is to investigate deeper as to whether KP was implicated, because at that time he was in charge of the Tamil Tiger Diaspora International chain

http://www.dailymirror.lk/