Friday, April 30, 2010

Sri Lanka demolishes Prabhakaran’s house

The ancestral home of Sri Lanka’s slain Tamil Tiger rebel chief Velupillai Prabhakaran has been demolished as it was becoming a tourist attraction, a Tamil politician said Thursday.

M. K. Sivajilingam, secretary of the Tamil National Liberation Alliance, accused security forces of destroying the house a year after Prabhakaran was killed when the rebels were finally defeated after decades of bloodshed.

“They (the government) are destroying pieces of history. They want to remove any traces of the LTTE (Liberation Tigers of Tamil Eelam),” Sivajilingam told AFP by telephone from the northern town of Jaffna.

Military spokesman Major General Prasad Samarasinghe and police spokesman Prishantha Jayakody denied any knowledge of the demolition.


The house, owned by Prabhakaran’s parents, was situated in the Jaffna peninsula in northern Sri Lanka.

Sivajilingam said many visitors from the island’s south had headed to the house after the conflict ended.

He led the Tigers throughout their violent struggle for a separate ethnic homeland, gaining a reputation as one of the world’s most ruthless and effective guerrilla leaders.


http://www.sify.com/

பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சை அளிக்க தயார்: தமிழக அரசு

பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.
இதை எதிர்த்து வழக்கறிஞர் கருப்பன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16ஆம் தேதி மலேசியாவில் இருந்து சென்னை வந்த பார்வதி அம்மாளை குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

விசா உள்ளிட்ட உரிய அனுமதியுடன் வந்த பார்வதி அம்மாளை, இந்தியாவுக்குள் அனுமதிக்காகதது சர்வதேச மனித உரிமை மீறல். இதனால் பார்வதி அம்மாளை தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை அழைத்து வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார். மேலும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு வக்கீல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி வாதாடுகையில்,

பிரபாகரனின் தந்தை வேலுபிள்ளை மற்றும் தாய் பார்வதி அம்மாள் ஆகியோரை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு கடந்த 2003ஆம் ஆண்டு தமிழக அரசு கடிதம் எழுதியது. அதன் அடிப்படையிலேயே பார்வதி அம்மாள் அனுமதிக்கப்படவில்லை.

தமிழக அரசு தனது கடிதத்தினை திரும்ப பெறும் வரையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒன்றும் செய்ய இயலாது என்றார்.

அப்போது தமிழக அரசு வக்கீல் ராஜா கலிபுல்லா கூறியதாவது:

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளிடம் இருந்து அரசுக்கு இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை. அவர் மனு கொடுத்தால் அதை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கேட்கப்படும். அதன் அடிப்படையில் சிகிச்சைக்கு அனுமதிக்க தயார் என்றார்.

மத்திய அரசு வக்கீல் ரவீந்திரன் கூறுகையில், தமிழக அரசு கேட்டுக்கொண்டால் இது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க தயாராக உள்ளது என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறுகையில், பார்வதியம்மாளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக 2 வாரத்துக்குள் மனு கொடுக்கப்படும். அந்த மனுவை மத்திய மாநில அரசுகள் பரிசீலித்து 4 வாரத்துக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும் என்றனர்.

Thursday, April 29, 2010

கிட்டுவை தமிழீழம் இழந்த கதை!

நாம் இக் கட்டுரைத்தொடரில் கெடுபிடிக்காலத்துக்குப் பின்னரான காலத்து புவிசார் அரசியலில் (Post- cold war geo politics)-1990 – 2001ம் ஆண்டு காலப்பகுதிக்குள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புபட்ட முக்கியமான சில விடயங்களை தற்போது கவனத்திற்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.


நாம் எமது முதலாவது அங்கத்தில் குறிப்பிட்டவாறு மரபுசார் யத்தத்தில் ஈடுபடக்கூடிய தகைமையுடன் வளர்ச்சியடைந்திருந்த படையணிகளைக் கொண்டிருந்த தமிழர் தேசம் -

தாயகப்பகுதியில் நடைமுறை அரசினை நிர்மாணித்து – காலனித்துவ காலத்தின் பின் தமிழர்களுக்கான முதலாவது அரசாக உலகப்பந்தில் இடம்பிடிக்கும் வாய்ப்பினைக் கொண்டிருந்த தமிழீழ தேசம் -

அந்த வாய்ப்பினை ஏன் இழந்தது என்பதற்கான காரணங்களை இக் கட்டுரைத்தொடர் தேடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலை தோற்றம் பெற்றதற்கு அகப் புறக் காரணிகள் காரணமாக இருந்திருக்கின்றன.

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் தமிழர் தேசம் தன்னகத்தே கொண்டிருந்த பலங்களும் பலவீனங்களும், போராட்ட காலத்தில் – போராட்டத்துக்காக – போராட்டத்தின் பெயரால் தமிழர் தேசம் மேற்கொண்ட நடவடிக்கைளின் சாதகமான – பாதகமான விளைவுகளும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கின்றன.

இவை அகக் காரணிகள் என்ற வகையினுள் அடங்குபவை.

தமிழர் தேசத்திற்கு வெளியே – நாம் சந்தித்த, எதிர் கொண்ட பல்வேறு சக்திகளின் செயற்பாடுகளும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இத்தகைய தாக்கங்களும் தமிழீழ தேசத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கின்றன.

இவை புறக்காரணிகள் என்ற வகையினுள் அடங்குபவை.

இவ் அக புறக் காரணிகள் கட்டிப்பிடித்து அணைக்கும், முட்டி மோதித் தெறிக்கும் ஆடுகளமாக புவிசார் அரசியல்தளம் இருக்கிறது.இதனால்தான் இக்கட்டுரைத் தொடர் புவிசார் அரசியலை சுற்றிச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான அகக் காரணிகளை செழுமையாக்கிச் செப்பனிட்டிருக்க வேண்டியது தமிழர் தேசத்தின் பொறுப்பாகக் கொள்ளப்படவேண்டியது.


எமது தவறுகளுக்கு நாம் வேறு எவரையும் பெறுப்பாக்க முடியாது. அவ்வாறு செய்ய முயல்வது நேர்மையற்ற ஒரு செயலாகவே இருக்க முடியும்.

இதே வேளை தமது நலன்களுக்காக எம்மைப் பலிக்கடாக்களாக பலி கொடுக்க முனைந்த, முனைகிற புறச் சக்திகளுக்கு தமிழர் தேசம் அடிபணிந்து போக முடியாது.

இத்தகைய சக்திகளை எதிர்த்து – வளைய வேண்டிய நேரத்தில் வளைந்து – பாய வேண்டிய நேரத்தில் பாய்ந்து – நாம் முன்னொரு அங்கத்தில் குறிப்பிட்டவாறு – தனது குஞ்சுகளைப் பாதுகாக்கப் போராடும் தாய்க்கோழி போலத் தமிழர் தேசம் போராடித்தான் ஆக வேண்டும்.

ஈழத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் இவ் அக புறக்காரணிகள் தமிழீழ விடுதலப் போராட்டத்தில் ஏற்படுத்திய தாக்கங்களுடன் தொடர்புபட்டவையாக இருந்திருக்கின்றன.

இதனால்தான் இக் கட்டுரைத்தொடர் ஈழம் தோல்வி கண்டதா அல்லது தோற்கடிக்கப்பட்டதா என்ற தலைப்பினைத் தாங்கி நிற்கிறது.

ஈழம் அகக்காரணிகளால் தோல்வி கண்டதா அல்லது புறக்காரணிகளால் தோற்கடிக்கப்பட்டதா என்ற கேள்வியினை இக் கட்டுரைத் தொடர் எழுப்பி நிற்கிறது.

உண்மையில் இவ் அகப் புறக்காரணிகள் தனித்தனியே பிரித்துப் பார்க்கப்பட முடியாதவை. இப் புரிதலும் இக் கட்டுரைத் தொடருக்கு உண்டு.

சூழலில் வாழும் உயிரியினைப் போலத்தான் உலகச் சூழலுக்குள் போராட்டங்களும் வாழ வேண்டியுள்ளன. இதனால் போராட்டத்தின் அகப்புறக் காரணங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.

சூழலில் போராடும் போது ஒரு உயிரி எடுக்கும் முடிவுகள் பல தடவைகளில் அதன் உயிர் வாழ்தலுடன் மிகவும் தொடர்புபட்டிருக்கும்.

போராட்டங்களை முன்னெடுக்கும் தேசங்கள் எடுக்கும் முடிவுகளும் பல தடவைகளில் போராட்டங்களின் உயிர்வாழ்தலுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருக்கும்.

உயிரிகளில் மனிதன் ஆறறிவு படைத்தவன் என்றும் அதனால் ஏனைய உயிரிகளை விட மேம்பாடடைந்திருக்கிறான் என்றும் நாம் பல தடவைகளில் பெருமிதம் கொள்வதுண்டு.

ஆனால் இந்த மனிதகுலத்துக்குள்தான் உயிர்வாழ்வதற்காக வலியோரை எதிர்த்து வலிமை குறைந்தோர் போராட வேண்டியுள்ளது. சிறிய தேசங்களும் வலிமை மிக்க தேசங்களை எதிர்த்துப் போராட்டங்களை நடாத்த வேண்டியுள்ளது.

இக் கட்டுரைத்தொடர் குறித்த குறிப்புக்களை நிறுத்தி தொடருக்குள் இவ்விடத்திலிருந்து நுழைவோம்.

1991 ஆம் ஆண்டில் இடம் பெற்ற ராஜீவ் கொலைச் சம்பவம் ஏன் இடம் பெற்றது என்பது குறித்து நோக்கியிருந்தோம்.

அப்போது யாழ்ப்பாணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ராஜீவின் கொலைக்கு சற்ற முந்திய காலத்தும் பிந்திய காலத்துமாக நிகழ்வுகள் சிலவற்றை இவ்வங்கத்தில் நோக்குவோம்.

இந்திய இராணுவம் 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியேறிய பின்னர் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தைத் தமது முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்திருந்தனர். ஜனாதிபதி பிரேமதாசாவுடன் அப்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

1990 ஆம் ஆண்டு யூன் மாதம் யுத்தம் மீண்டும் ஆரம்பமாகிப் பேச்சுவார்த்தைகள் முறிவடைகின்றன. இரண்டாவது தமிழீழப் போர் ஆரம்பமாகிறது.

சிறிலங்கா அரசுடன் விடுதலைப்புலிகள் கொண்டிருந்த தந்திரோபாய உறவுக்கான தேவை இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்துடன் அற்றுப்போகிறது.

தமிழீழம் என்பது பேச்சுவார்த்தைகளின் மூலம் பெறக்கூடியது அல்ல என்று விடுதலைப்புலிகள் கருதியமையால் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட முறுகல் நிலைமையுடன் போரின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொள்கின்றனர்.

சிறிலங்கா அரசும் தான் விரும்பும் வகையிலான ஒரு தீர்வுத்திட்டப் பொதிக்குள் விடுதலைப்புலிகளை மூடிக்கட்ட முடியாது என்பதை உணர்ந்திருந்தமையால் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தைத் தீவிரப்படுத்துகிறது.

சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த 1989 -1990 காலத்தில் கொழும்பிலும் தெற்குப் பகுதிகளிலும் விடுதலைப்புலிகளுக்கு மரியாதையும் செல்வாக்கும் இருந்தது.

இக் காலப் பகுதியைப் பாவித்து எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தேவையான விதைகளை விடுதலைப்புலிகள் இயக்கம் தெற்கில் தூவி விட்டிருந்தது. இவ் விதைகள் இயல்பாக வளர்ச்சியடைந்து வந்து கொண்டிருந்தன

1990 – 1994 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற இரண்டாம் கட்ட விடுதலைப் போராட்டத்தில் தமிழரின் தாயகப்பிரதேசங்களுக்கு வெளியேயான – குறிப்பாக கொழும்பிலும், ஏனைய தெற்குப் பகுதிகளிலும் மேற்கொள்ளக்கூடிய இராணுவ நடவடிக்கைகளில் விடுதலைப்புலிகள் இயக்கம் கூடிய கவனம் செலுத்துகிறது.

இதற்கு பேச்சவார்த்தைக் காலத்தில் விதைத்திருந்த, விதைத்து வளர்ந்து கொண்டிருந்த விதைகள் பெரிதும் துணைபுரிபவையாய் அமைகின்றன.

இக் காலகட்டத்து இராணுவ நடவடிக்கைகளில் அரசியல் கொலைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன.

1991 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி துணை இராணுவ மந்திரியாக இருந்த ரஞ்சன் விஜேரத்னா Remote Control மூலம் இயக்கப்பட்ட ஓரு கார்க்குண்டு வெடிப்பின் மூலம் கொல்லப்படுகிறார்.

விடுதலைப்புலிகளுக்க எதிரான நேரடி, மறைமுக இராணுவ நடவடிக்கைகளை இவர் தீவிரமாக மேற்கொண்டிருந்த வேளையிலேயே இச் சம்பவம் நடைபெறுகிறது.

1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற ராஜீவ் காந்தி கொலைச்சம்பவம் குறித்து கடந்த அங்கத்தில் பார்த்திருந்தோம்.

ராஜீவ் சம்பவத்தின்பின் விடுதலைப்புலிகளின் நடவடிக்கை தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுகிறது.

இது மட்டுமன்றி இந்தியா தனது இராஜதந்திர வியூகத்தினால் சர்வதேச அரங்கிலும் விடுதலைப்புலிகள் மீதான பிடியினை இறுக்கத் தொடங்குகிறது.

இந்தியாவின் இச் சர்வதேச வியூகத்தின் முதற்பலியாக விடுதலைப்புலிகளின் முன்னாள் யாழ் மாவட்டத் தளபதியும் பின்னர் சர்வதேச கிளைகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தவருமான கிட்டு அமைந்து விடுகிறார்.

கிட்டு பிரேமதாசாவுடன் பேச்சுவார்த்தை நடாத்திய காலத்தில் – 1989 ஆம் ஆண்டு வைத்திய சிகிச்சைக்கென லண்டன் வந்தடைந்து விடுதலைப்புலிகளின் வெளிநாட்டுக்கிளைக் கட்டமைப்பை பொறுப்பெடுத்துக் கொண்டவர்.

இவர் லண்டனுக்கு வரும்போது வெளிநாட்டுக் கிளைகளின் பொறுப்பு கேபியின் கைகளிலேயே இருந்தது. கிட்டு வந்ததும் கிட்டுவும் கேபியும் தமது வேலைகளைப் பங்கிட்டுக் கொள்கின்றனர்.

வெளிநாட்டுக் கிளைகளின் நிர்வாகம், அரசியல் வேலைகள், நிதிசேகரிப்பு ஆகியன கிட்டுவின் பொறுப்பில் வருகின்றன.

சேகரிக்ப்பட்ட நிதியினைப் பொறுப்பெடுத்து விநியோகப் பணிகளை ஒழுங்கமைத்து மேற்கொள்வது கேபியின் பொறுப்பில் வருகின்றன.

கிட்டுவின் வருகை விடுதலைப்புலிகளின் சர்வதேசக் கிளைகள் வளர்ச்சியடைவதற்கு உதவுகிறது. லண்டனில் இவர் இருந்த காலத்தில் பலரையும் விடுதலைப் போராட்டத்துடன் ஒருங்கிணைப்பதற்கு பெரிதும் முயற்சி செய்கிறார்.

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை மட்டுமன்றி இவரது காலத்தில் யாழ்ப்பாணத்தில் தடைசெய்யப்பட்ட இயக்கங்களில் இருந்து தப்பி வந்திருந்த முன்னைய போராளிகளுடனும் கிட்டு தொடர்புகளை ஏற்படுத்தி போராட்டத்தின் பால் அவர்களை இணைக்க முயல்கிறார்.

மக்களை போராட்டத்துடன் இணைத்தல் என்பது படிமுறைகளைக் கொண்டது. எதிர்ப்பாளர்களை எதிர்ப்பற்றவர்களாக்குவது – அக்கறையற்றிருப்பவர்களை அக்கறை கொள்ளச் செய்வது – ஆதரவாளர்களை செயற்பாட்டாளர்களாக்குவது – ஆர்வமுள்ள செயற்பாட்டாளர்களை முழுநேரப் பணியார்களாக்குவது – என பல படிமுறைகளைக் கொண்டவகையில் போராட்டத்துடன் மக்களை இணைக்கும் பணி ஒழுங்கமைக்கப்பட வேண்டும் எனக் கிட்டு சிந்திக்கிறார்.

கிட்டுவின் அணுகுமுறை லண்டனில் பலரை ஆகர்சித்துக் கொள்கிறது. முன்னர் கிட்டு யாழ்ப்பாணத் தளபதியாக இருந்தபோது கிட்டுவைத் தெரிந்தவர்கள், கிட்டர் நிறையவே மாறி விட்டார் எனப் பேசிக் கொள்கின்றனர்.

கிட்டுவின் அணுகுமுறையாலும் அறிவுக்கூர்மையாலும் கவரப்பட்ட சட்ட அறிஞர் நடேசன் சத்தியேந்திரா விடுதலைப்புலிகளின் சர்வதேச செயலகத்தின் சட்ட ஆலோசகராக விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் இணைந்து பணிபுரிய முன்வருகிறார்.

இவ்வாறாக விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் சர்வதேச மட்டத்தில் வளர்ச்சியடையத் தொடங்குகின்றன.

1990 ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் யுத்தம் மூண்ட பின்னரும், கிட்டு மீண்டும் யுத்த நிறுத்தம், பேச்சுவார்த்தைகள் வருவதற்கு உதவுவார் என்பதானால் கிட்டுவின் இருப்பை லண்டன் சகித்துக் கொள்கிறது.

1991 ஆம் ஆண்டு மே மாதம் ராஜீவ் கொல்லப்பட்ட பின்னர் லண்டனில் கிட்டுவின் மீது அழுத்தம் அதிகரிக்கிறது. கிட்டு லண்டனை விட்டு தலைமைறவாக வெளியேறுகிறார்.

பின்னர் சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தையினை மீண்டும் ஆரம்பிக்க உதவும் தனது முயற்சிக்கு கிட்டு உதவுவார் என்ற எண்ணத்தோடு சுவிற்சலாந்து அவரை 9 மாதங்கள் அங்கு தங்குவதற்கு அனுமதிக்கிறது.

குறிப்பிட்ட காலம் முடிய கிட்டு மீண்டும் தலைமறைவாக நாடு நாடாக அலையும் நிலை ஏற்படுகிறது. ஒரு காலை இழந்தவராக மிகவும் சிரமத்தோடு கிட்டு அலைந்துழல்கிறார்.

தாயகத்தின் மீது பற்றும் பாசமும் தாயகத்தை விட்டு வெளியேறிய பின்னரே கூடுதலாகத் தெரிகிறது எனக் கூறிக்கொள்கிறார்.

வெளிநாடுகளில் விடுதலைக்காகப் பணியாற்றிய காலங்களில் தமக்கு ஏற்பட்ட மனஉணர்வுகளை தனது மனைவிக்கும் பிரபாகரனுக்கும் போராளிகளுக்கும் கடிதங்களாக வடித்துக் கொள்கின்றார்.

இவர் தனது மனைவிக்கு எழுதிய கடிதங்கள் பின்னர் புத்தகமாக வெளிவருகிறது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அரியதொரு ஆவணம் அது.

இவற்றை விட தமது மன உணர்வுகளை ஓவியமாகவும் அவர் வரைந்து கொள்கிறார்.

சிறிலங்காவுடனும் இந்தியாவுடனும் விடுதலைப்புலிகளுக்குப் பகை உறவு ஏற்பட்ட பின்னர் கிட்டுவுக்காக எந்த நாடும் கதவு திறக்கவில்லை.

தலைமறைவாக இருந்து அரசியற்பணிகளை முன்னெடுப்பது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு கிட்டு வருகிறார். இதனால் மீண்டும் தாயகம் திரும்புவது என்ற முடிவினை எடுக்கிறார்.

அதனைப் பிரபாகரனுக்கும் தெரியப்படுத்துகிறார். பிரபாகரனும் கிட்டுவின் முடிவுக்குச் சம்மதிக்கிறார். கிட்டுவினை தாயகம் அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரபாகரன் கேபியைக் கேட்டுக் கொள்கிறார்.

ஜரோப்பாவில் தனது தலைமறைவு வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மீண்டும் தலைமறைவாகத் தென் கிழக்காசிய நாடொன்றுக்குச் செல்கிறார் கிட்டு.

அங்கு கேபியைச் சந்திக்கிறார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலம் தொடர்பாகப் பல்வேறு விடயங்களை இவர்கள் பேசிக் கொள்கின்றனர்.

கேபி விடுதலைப்புலிகளின் விநியோகக் கப்பல் ஒன்றில் கிட்டுவைத் தாயகம் அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளை செய்கிறார். கிட்டுவுக்குத் துணையாக குட்டிசிறியும் சில போராளிகளும் தாயகத்தில் இருந்து வந்து சேர்கின்றனர்.

கிட்டு பயணம் செய்யும் கப்பல் பயணத்திற்குத் தயாராகிறது. இக் கப்பலில் கிட்டு பயணம் செய்கிறார் என்பதனை இரகசியமாக வைத்திருப்பதற்காக கப்பலின் தொடர்பாடல் முறையில் மாற்றம் செய்கிறார் கேபி.

உரையாடலை ஒட்டுக் கேட்கும் வாய்ப்பினைக் குறைப்பதற்காக கப்பலில் உள்ள வழமையான தொடர்பாடல் கருவிகளைப் பயன்படுத்துக்கூடாது என கப்பல் கப்டனுக்கும் பணியாளருக்கும் கேபி உத்தரவு பிறப்பிக்கிறார்.

தொடர்பாடலுக்காக அப்போது புதிதாய் வந்திருந்த சற்றலைட் தொலைத்தொடர்பு உபகரணம் ஒன்று பெறப்பட்டு அதனை இயக்கும் விதம் குறித்துப் பயிற்சியும் கப்பல் தொழில்நுட்பவியலாளருக்கு வழங்கப்படுகிறது.

கப்பலில் உள்ளோர் எவரும் கிட்டு கப்பலில் பயணிப்பதனை தொலைத் தொடர்பு ஊடகத்தினூடாகக் கரையில் இருப்பவர்களோடு பேசக்கூடாது எனவும் கேபி பணித்துக் கொள்கிறார்.

கப்பல் தனது பயணத்தை ஆரம்பித்து விட்டது.

கப்பல் பயணிக்கும் போது சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியப்படையினர் கப்பலை சந்தேகத்தில் பின் தொடர்கின்றனர். இத்தகைய பின் தொடர்கைகள் இடைக்கிடையே நடைபெறுவதுதான்.

இருந்தும் கிட்டு கப்பலில் இருப்பதால் இது பெரும் பதட்டத்தைக் கப்பல் பணியாளர்கள் மத்தியில் தோற்றுவித்து விடுகிறது. பதட்டத்தில் புதிய தொழில் நுட்பக் கருவியை அவர்களால் உரிய முறையில் இயக்க முடியாமல் போய் விடுகிறது.

கப்பலில் உள்ள வழமையான கருவியினைப் பயன்படுத்தி அவர்கள் தொடர்பாடலை மேற்கொள்கின்றனர். நிலைமை சிக்கல் அடைந்தமையால் கிட்டுவும் கட்டளைப் பொறுப்பைத் தனது கையில் எடுத்துக் கொள்கிறார். இந்தியப்படையினர் உரையாடலை ஒட்டுக் கேட்டு கிட்டு கப்பலில் இருப்பதனை உறுதி செய்து கொள்கின்றனர்.


இதற்கிடையில் இந்தியக் கடற்படையின் பின்தொடர்கையினை நிறுத்துவதற்கு இந்திய அரசியல் மட்டத்தில் சில முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தால் கோபடைமந்திருந்த இந்திய அரச தரப்பிடமிருந்து சாதகமான பதிலேதும் இல்லை.

கப்பலைச் சரணடையுமாறு இந்திய கடற்படையினர் தொடர்ந்து கூறிக் கொண்டு பின் தொடர்ந்து கொண்டிருந்தனர். இரண்டு நாட்களாக இப் பின் தொடர்வு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு கட்டத்தில் கிட்டுவே நேரடியாக இந்திய கடற்படையதிகாரிகளுடன் பேசுகிறார். சரணடைய முடியாது என்பதனை எடுத்துச் சொல்கிறார். தாம் விடுதலைப் போராளிகள் என்பதனையும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதனையும் எடுத்துக் கூறுகிறார். தமது பயணத்தைத் தொடர அனுமதிக்கும்படியும் கோருகிறார்.

இந்தியக் கப்பற்படை தமது கப்பலை நெருங்க முனைந்தால் கப்பலையும் தகர்த்து தாமும் தற்கொலை செய்து கொள்வோம் என உறுதியாகக் கூறுகிறார்.

இந்தியப்படையினர் கேட்பதாக இல்லை. தொடர்ந்து கப்பலை நெருங்கி வந்து கொண்டிருந்தனர்.

கிட்டு தனது இறுதி எச்சரிக்கையினையும் விடுத்து விடுகிறார். இந்தியப்படையினர் பின்வாங்குவதாக இல்லை.

கப்பல் பணியாளர்களை கப்பலில் இருந்து வெளியேறுவதற்கான உத்தரவுகளைக் கொடுத்து விட்டு கப்பலைத் தகர்ப்பதற்கும் தாம் குப்பிகளைக் கடித்துக் கொள்வதற்கு கிட்டுவும் குட்டிசிறியும் ஏனைய போரளிகளும் முடிவு செய்து கொள்கின்றனர்.

இந்தியக் கப்பல் மேலும் நெருங்குகிறது. கப்பல் பணியாளர்கள் படகு மூலம் வெளியேற்றப்படுகின்றனர்.

கப்பலைத் தகர்ப்பதற்கான உத்தரவினைக் கிட்டு பிறப்பிக்கிறார். கப்பல் தகர்கிறது.


இப்படியாகத்தான் கிட்டுவை 16.01.1993 அன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் இழந்தது. கிட்டு தாயகம் போய்ச் சேர்ந்திருந்தால் அது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு பலவிதங்களில் பலம் சேர்த்திருக்கும்.

களத்திலும் புலத்திலும் நேரடி அனுபவம் உள்ள – பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் – வலது கையாக இருக்கக்கூடிய ஒரு தளபதி மீண்டும் போய்ச் சேர்ந்திருப்பாராயின் விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாடுகள் அவரது பொறுப்பிலேயே இருந்திருக்கும்.

அனுபவத் தெறிப்புடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சர்வதேச உறவுப்பரப்பினை விரித்திருந்திருக்க முடியும்.

ஆனால், அந்தக் கொடுப்பினை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு கிடைக்கவில்லை.



தொடரும்…



- நன்றி: பொங்குதமிழ்
http://www.nerudal.com/

Wednesday, April 28, 2010

தமிழீழ தேசத்தின் விடிவுக்காக தம்மை அர்ப்பணித்தோரது குடும்பங்கள் பிச்சை எடுக்கும் நிலை!

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள் நாளாந்த உணவிற்கு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றனர் என மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடும்பத்தலைவர்களில் பெருமளவானோர் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவான குடும்பத்தலைவர்கள் போரில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்துள்ளனர்.

இந்த நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்டுவந்த நிவாரணக் கொடுப்பனவுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டு நிவாரண அட்டைகளும் மீளப் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

கணவன்மார்கள் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவான கணவன்மார்கள் போரில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்துள்ளனர். இந்த நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்டுவந்த நிவாரணக் கொடுப்பனவுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டு நிவாரண அட்டைகளும் மீளப் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தாய்மார்கள் தங்களது பிள்ளைகளுக்கு உணவு வழங்கமுடியாமலும், குழந்தைகளுக்கு பால்மா, உணவுகளுக்காக வீடுவீடாகச் சென்று கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பேரவலம் நிலவிவருகின்றது.

தமக்கு உதவி வழங்குமாறு கிழக்கு மாகாண சபையினர், அரச அதிபர், பிரதேச செயலர்கள் உட்பட்ட அதிகாரத்தில் உள்ள அனைவரிடமும் தொடர்பு கொண்ட போதிலும் தமக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என சம்பத்தில் பாதிக்கப்படுகின்ற பெண்கள் கண்ணீர்விட்டு கதறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பங்களே வன்னியில் வாழ்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குறிப்பிட்ட குடும்பங்களுக்காவது யாராவது புலம்பெயர் அமைப்புக்கள் உதவ முன்வருவார்களா?

http://www.nerudal.com/

Tuesday, April 27, 2010

காயமடைந்த படையினரை கைவிட்டுள்ளது: சிறிலங்கா

சிறிலங்கா அரசு தனது போர் வெற்றியை தொடர்ச்சியாக கொண்டாடி வருகின்றது ஆனால் அதில் இறந்த மற்றும் காயமடைந்த தனது படையினரை அரசு கைவிட்டுள்ளதாக தொன்னிலங்கை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

இடம்பெயர்ந்த தமிழ் மக்களை புறம்தள்ளியதை போலவே சிறிலங்கா அரசு காயமடைந்த தனது படையினரையும் கைவிட்டுள்ளது. சிறீலங்கா அரசு தொடர்ச்சியாக போர் வெற்றியை கொண்டாடி வருகின்றது. ஆனால் கடந்த மூன்று வருடங்கள் நடந்த கடுமையான போரில் கொல்லப்பட்ட 6,200 படையினரின் குடும்பங்களையும், 30,000 இற்கு மேற்பட்ட காயமடைந்த படையினரையும் அது கைவிட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் பெருமளவானோர் அவயவங்களை இழந்துள்ளனர். பார்வையையும், கேட்கும் சக்தியையும் இழந்துள்ளனர். 300 இற்கு மேற்பட்டவர்கள் தமது இயங்கும் சக்தியை இழந்துள்ளனர்.

போரின் இறுதிக்கட்டத்தில் கடந்த இரு வருடங்களில் சிறிலங்கா இராணுவத்தில் 80,000 பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர். பெரும் தொகையான படையினரை இணைத்துக் கொண்டதனால் தான் போரில் வெற்றிபெற முடிந்ததாக அரசு தெரிவித்துள்ளது.

தென்னிலங்கையில் உள்ளவர்களின் வேலையில்லா பிரச்சனைகளுக்கு அது ஒரு தீர்வாகவும் இருந்தது என 1991 ஆம் ஆண்டு இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் தனது கால் ஒன்றை இழந்த ஆனந்த தென்னகோன் (40) தெரிவித்துள்ளார்.

இறந்த அல்லது காணாமல்போன படையினருக்கு அரசு காப்புறுதி நிதி மூலம் 750 அல்லது 1,200 டொலர்களை வழங்கி வருகின்றது. அதன் பின்னர் அவர்களின் உறவினர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகின்றது. காயமடைந்த படையினருக்கும் காப்புறுதி நிதியும், ஊதியங்களும் வழங்கப்படுகின்றன. ஆனால் அவை மருத்துவச் செலவுகளுக்கு போதுமானதல்ல.

தனக்கு தேவையான சிறப்பு சக்கர வண்டியை பெறுவதற்கு 10 மில்லியன் ரூபாய்கள் (90,000) டொலர்கள் தேவை அதனை உள்ளூர் நிறுவனங்கள் தயாரிப்பதில்லை என காயமடைந்த படை சிப்பாய் மஞ்சு லக்ஸ்மன் (32) தெரிவித்துள்ளார்.

ஊனமுற்ற படையினரை பராமரிப்பதே தமது முதல் பணி என இராணுவத்தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார். ஆனால் அவர் காணாமல் போன படையினர் தொடர்பாக அவர் எதனையும் தெரிவிக்கவில்லை.

காணாமல்போன படையினரின் எண்ணிக்கைகள் இறந்த படையினரை விட அதிகமாகும்.

2008 ஆம் ஆண்டுக்கான சிறீலங்காவின் பாதுகாப்பு செலவீனம் 1.6 பில்லியன் டொலர்களாகும். அது கடந்த ஒக்டோபர் 20 விகிதத்தால் அதிகாரித்துள்ளது. காயமடைந்த படையினரை பராமரிப்பது, இறந்த படையினருக்கு நிதிகளை வழங்குவது, இராணுவத்தின் பலத்தை தக்கவைப்பது போன்ற விடயங்களால் சிறீலங்காவின் பாதுகாப்பு செலவீனம் அதிகரித்துள்ளது.

இராணுவம் 10 மில்லியன் டொலர்களை உலகம் முழுவதும் பரந்து வாழும் சிங்கள மக்களிடம் திரட்டிய போதும் அது சில டசின் குடும்பங்களுக்கே போதுமானது.

எனது குடும்பம் மிகவும் வறுமையானது, அவர்களால் என்னை பராமரிக்க முடியாது என கழுத்திலும், முள்ளம்தண்டிலும் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்த கப்டன் தனுஷ்கா பெரேரா (33) தெரிவித்துள்ளார். அவர் ராகம வைத்தியசாலையில் தங்கியுள்ளர்.

எனது பெற்றோர்கள் எனது ஊதியத்தில் தான் வாழ்ந்து வருகின்றனர். நாம் செங்கற்களால் கட்டப்பட்ட வீட்டில் கூட இதுவரை வாழ்ந்ததில்லை, எனக்கு சென்று தங்குவதற்கு இடமில்லை அதனால் வைத்தியசாலையில் தொடர்ந்து தங்கியுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே மகிந்த ராஜபக்சாவின் எதிர்காலத் திட்டங்கள் அவர் எதிர்கொள்ளப் போகும் சவால்களை சந்திப்பதற்கு போதுமானவை அல்ல என அவை மேலும் தெரிவித்துள்ளன.

Tamils protest Amitabh Bachchan's proposed visit to Sri Lanka

Hundreds of Tamils on Sunday protested outside the bungalow of Bollywood superstar Amitabh Bachchan, shouting slogans against his decision to visit Sri Lanka as chief guest for the India International Films Awards (IIFA) function in July.
"We urge him not to attend the function in Colombo as a symbol of solidarity for the Tamilian cause in Sri Lanka. Tamils have been subject to atrocities and war crimes perpetrated by the Mahinda Rajapaksa government in that country," C. Rajendran, spokesperson for the protesters said.

The protesters marched from Bachchan's Pratiksha bungalow to his Jalsa residence, where a delegation met him and two IIFA office bearers, who assured the representatives that they would convey the sentiments of Tamils to the IIFA governing board and take a suitable decision.

Later, Rajendran told mediapersons that the Sri Lankan government had allegedly killed over 1.5 lakh Tamils during its war with the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in the last couple of years. He claimed that over 3.5 lakh Tamils continue to face a "hostile administration" in that country.

Sunday, April 25, 2010

''இந்திய வீடுகளில் குடியிருக்கும் சிங்களவன்!''...Vikatan Article

மே மாதம் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கின்றன! நெஞ்சில் கொஞ்சம் இரக்கத்தையும் ஈரத்தையும் வைத்திருப்பவர்கள் அத்தனை பேரையும் ரத்தக் கண்ணீர் வடிக்கவைத்த ஈழத்துக் கொடூரங்கள் அரங்கேறி ஓராண்டு முடியப்போகிறது. இறந்து மண்ணுக்குப் போனவர் எண்ணிக்கைகூட முழுமையாக இன்னமும் எடுக்கப்படவில்லை. மனரீதியாக இறந்துபோய் நாட்களை நகர்த்திக்கொண்டு இருப்போர் நிலை குறித்தும் முழுமையாக அறிய முடியவில்லை. ஆனால், அவர்கள் இரண்டு தேர்தலை நடத்தி முடித்துவிட்டார்கள். கோமா நிலையில் கிடக்கும் ஈழத்தின் இன்றைய நிலவரங்கள் குறித்து அறிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனைச் சந்தித்தோம்...

''ஈழத்துக் கொடூரங்கள் நடந்து முடிந்து ஓராண்டு ஆகப்போகிறது. என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்பட்டுஉள்ளன?''

''கொடூரங்கள் நடந்து முடியவில்லை. இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஈழத் தமிழர் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. ஏமாற்றமே இன்னமும் தொடர்கிறது. மேலும் மேலும் துன்பம் அதிகமாகி வருகிறது. முள்வேலி முகாமில் இருந்த மக்களை உலக நிர்பந்தத்துக்குப் பயந்து விடுவிப்பதாக ராஜபக்ஷே கூறினார். முழுமையாக விடுவிக்கவில்லை. ஒரு பகுதி மக்களையே விடுவித்துள்ளார். விடுவிக்கப்பட்டவர்களும் தங்களது ஊருக்குப் போனால் அவர்கள் வீடுகள் எல்லாம் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டு உள்ளன. எனவே, இருப்பதற்கு இடம் இல்லாமல் பள்ளி, கோயில்களில் அடைக்கலம் புகுந்தார்கள். அவர்கள் தங்களது சாப்பாட்டுக்காக விவசாயம் பார்க்கவோ மீன் பிடிக்கப் போகவோ சிங்கள ராணுவம் அனுமதிக்க மறுக்கிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள், 'வன்னிப் பகுதியில் ஏராளமான ராணுவ முகாம்கள் இருப்பதால் தமிழ்ப் பெண்கள் வெளியே நடமாட அஞ்சுவதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

முகாம்களில் இருப்பவர் களுக்கும் அளிக்கப்பட்டு வந்த உதவிகள் அரைகுறையாகவே கிடைக்கின்றன. சுதந்திரமாக நடமாடலாம் என்று இவர் களுக்கு சொல்லப்பட்டு இருந் தாலும், எங்கு போவது என்று தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறான் தமிழன். முகாம்களில் இல்லாத தமிழர்கள், சிங்கள ராணுவம் மற்றும் டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற குழுக்களால் அதிகமான துன்பங்களை அனுபவிக்கிறார்கள். இதைவிடக் கொடுமையான செய்தி என்னவென்றால், இந்திய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்காகக் கொடுத்த 1,000 கோடி ரூபாய் பணத்தில் கட்டப்பட்ட வீடுகளில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகிறார்கள். அவர்களுக்காக புத்தக் கோயில்கள் அமைக்கப்படுகின்றன. சிங்களப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்க் குழந்தைகள் சிங்களம் படித் தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. தமிழ்ப் பெயர் தாங்கிய ஊரின் பெயர் கள் சிங்களமாக மாற்றப் படுகின்றன. அதாவது, தமிழ்ப் பகுதிகள் என்று இலங்கையில் எதையும் சுட்டிக் காட்டிவிடக் கூடாது என்பதற்கான வேலைகள்தான் இந்த ஓராண்டு காலத்தில் நடந்து முடிந்திருக்கின்றன!''

''ஜனாதிபதி தேர்தலில் வென்றது மாதிரியே நாடாளுமன்றத் தேர்தலிலும் ராஜபக்ஷே வென்றிருக்கிறார். இந்தத் தொடர் வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் 70 சதவிகிதத் தமிழர்கள் இந்தத் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார்கள். அதாவது, சிங்கள தேசத்தின் இனவாத அரசியலுக்குள் எமது நலன்களைத் தேட நாங்கள் விரும்பவில்லை என்பதைத்தான் இந்தப் புறக்கணிப்பின் மூலம் தமிழர்கள் உலகத்துக்கு அறிவித்திருக்கிறார்கள். பொதுவாகவே, இலங்கையில் இதுவரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் 75 சதவிகித வாக்குகள் பதிவாகும். ஆனால், வரலாற்றில் முதன்முறையாக 55 சதவிகித வாக்குகள்தான் பதிவாகி உள்ளன. தமிழ் மக்கள் மட்டுமல்ல; சிங்கள மக்களும் இந்தக் கேலிக்கூத்தான நடைமுறைகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன!''

''ஃபொன்சேகா, தனது தொகுதியில் வெற்றிபெற்றுள்ளாரே?''

''ராஜபக்ஷே, ஃபொன்சேகா மோதலின் விளைவாக சிங்கள மக்கள் பிளவுபட்டு உள்ளார்களே தவிர, தமிழர்களுக்கு இதனால் எந்த ஆதாயமும் கிடைக்கப்போவது இல்லை. கடந்த ஆண்டின் இதே ஏப்ரல் மாதங்களில் நடந்த கொடுமைகளுக்கு அவர்கள் இருவரும்தானே காரணம். இவர்களின் மோதல் என்பது தேர்தல் மோதலாக மட்டும் நின்றுவிடாது. ராணுவத்துக்கும் மோதல் வெடிக்கும் அபாயம் இருக் கிறது. ஃபொன்சேகாவுக்கு ஆதரவான ராணுவ அதிகாரிகள் பதவியில் இருந்து விலக்கப்பட்டு உள்ளனர். இது ராணுவத்தினர் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் ஃபொன்சேகா ஒரு உறுப்பினராக வென்றிருந்தாலும் அவரை நாடாளு மன்றத்துக்குள் வர அனுமதிக்க மாட்டார்கள். 1980-களின் முதற் பகுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த டெலோ தலைவர் குட்டிமணி, சிறையில் இருந்தபோதே வட்டுக்கோட்டை தொகுதி உறுப்பி னராக நியமனம் செய்யப்பட்டார். ஆனால், அவரை நாடாளுமன்றம் செல்வதற்கு அனுமதிக்காமல் கொலை செய்துவிட்டார்கள். இந்தக் கதி ஃபொன்சேகாவுக்கும் ஏற்படலாம்!''

''இதையெல்லாம் உலக நாடுகள் அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருக்கக் காரணம்?''

''வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை, சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுத்தாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது என்பதுதான் உண்மை. போர்க் குற்றவாளியாக ராஜபக்ஷேவை மேற்கு நாடுகளும் ஐ.நா-வும் குற்றம் சாட்டி வருகின்றன. அதில் இருந்து தப்புவதற்கு அவர் பெருமுயற்சி செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கூடிய நிரந்தர மக்கள் நீதிமன்றம் என்ற அமைப்பு நடத்திய விசாரணையின் இறுதியில் வழங்கப் பட்ட தீர்ப்பில் 'ராஜபக்ஷே போர்க் குற்றவாளியாக விசாரிக்கப்பட வேண்டியவர்' என்று தெளிவாகத் தீர்ப்பளித்து உள்ளது. இந்தத் தீர்ப்புக்கு பிறகு, பிரிட்டிஷ் அரசாங் கம், 'நாங்கள் இலங்கைக்கு இதுவரை ஆயுதம் வழங்கியதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம். இனி வழங்க மாட்டோம்' என்று மன்னிப்பு கேட்டுள்ளது.

இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் ஆயத்த ஆடைகளுக்கு இதுவரை கிடைத்து வந்த வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் ரத்து செய்துள்ளது. உலக நாடுகள் இந்தக் கொடூரத்தை உணர்ந்துள்ளன. ஆனால், இந்தியாதான் இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவும் ராணுவரீதியாகவும் உதவி செய்துவருகிறது. இந்தியக் கடற்படைக் கப்பல்கள் திரிகோணமலைக்குச் சென்று சிங்கள கடற்படைக்கு பயிற்சி அளித்து வருகிறது. தமிழ் மீனவர்களைக் காப்பாற்ற வக்கற்ற இந்தியக் கடற்படைக்கு ஏன் இந்த வீண் வேலை? இந்திய அரசும் கருணாநிதி அனுப்பிய தூதுக் குழுவும் தவிர, உணர வேண்டியவர்கள் அனைவரும் ஈழத்துக் கொடுமையை உணர ஆரம்பித்துஇருக்கிறார்கள்!''

''சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் இந்த ஓராண்டு காலத்தில் அதிகமாகி இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?''

''இலங்கையில் சீனா அதிகமாகக் காலூன்றுவது இந்துமாக் கடல் மார்க்கம் அவர்களது கட்டுப்பாட்டில் போவதற்குத்தான் வழிவகுக்கும். இதை மேற்கு நாடுகள் விரும்பவில்லை. அவர்களைவிட இது இந்தியாவுக்குத்தான் பெரும் ஆபத்தாக முடியும். ஏற்கெனவே, இந்தியா வைச் சுற்றி உள்ள நேபாளம், மியான்மர், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் சீனா பலமாக வேரூன்றிவிட்டது. பாகிஸ்தானும் நெருங்கிய கூட்டாளி ஆகி விட்டது. எஞ்சியிருந்த இலங்கை யும் சீனாவின் பக்கம் சாய்ந்து விட்டது. இந்தியாவைச் சுற்றி சீனா உருவாக்கி வரும் பேராபத்தை டெல்லியில் உள்ளவர்கள் உணரவில்லை. 'சீனாவைவிட நான் அதிகமாக உதவிகள் செய்கிறேன்' என்று இந்தியா கையாளும் தந்திரம் தற்கொலைக்குச் சமம். இந்தியாவைத் தனது நேசநாடாக ராஜபக்ஷே எப்போ தும் நினைக்க மாட்டார். அதை டெல்லி எவ்வளவு விரைவாக உணர்கிறதோ அது நம்முடைய நாட்டுக்கு நல்லது!''

''விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று இயங்குகிறதா?''

''ஈழத் தமிழர் பிரச்னை இன்று உலகளாவிய பிரச்னையாக இருப்பதற்கு பிரபாகரனும் விடுதலைப் புலிகள் இயக்கமும் செய்துள்ள தியாகம்தான் காரணம். 30 ஆண்டுகாலம் புலி கள் நடத்திய போராட்டத்தால் தான் தமிழர்கள் பாதுகாக்கப் பட்டனர். 2 லட்சம் தமிழர்கள் உயிர் இழந்தும், 45 ஆயிரம் புலிகள் வீர மரணத்தைத் தழுவியும், 10 லட்சம் தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ முடியாமல் அகதிகளாக வெளி ஏறியும், 5 லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே எல்லா வற்றையும் இழந்து தவித்த ஈழத்து சோகம் சொல்லி மாளாது. ஆனாலும், தங்கள் துன்பத்துக்குத் தமிழீழமே தீர்வு என்பதைத் தமிழர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இப்போது நடந்திருப்பது தற்காலிகப் பின்னடைவு என்றுதான் கருதுகிறார்களே தவிர, எல்லாம் முடிந்துவிட்டது என்று எவரும் நினைக்கவில்லை. புலிகளை அழித்துவிட்டோம் என்று கொக்கரிக்கிற ராஜபக்ஷே, கூடுத லாக ஒரு லட்சம் பேரை ராணுவத்தில் சேர்க்கிறார். ஆயுதங்களை வாங்கிக் குவிக்கிறார். புலிகள் அமைப்பு இயங்குகிறது, முன்னிலும் பலமாக இயங்குகிறது, அடுத்த தாக்குதலை அவர்கள் ஆரம்பித்தால் அது பலமானதாக இருக்கும் என்பது ராஜபக்ஷேவுக்குத் தெரியும்!''

''ஏற்கெனவே கேட்கப்பட்டதுதான்... பிரபாகரன் இருக்கிறார் என்று இன்னமும் எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?''

''பிரபாகரனின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து கிடைத்து வந்த தகவலை வைத்துதான் நான் உறுதியாகக் கூறுகி றேன்.

பிரபாகரன் உள்பட முக்கியத் தளபதிகளை ஒழித்துவிட்டதாக ராஜபக்ஷே சொல்வதை சிங்கள மக்களே நம்பவில்லை. இன்னமும் அவர்களுக்கு அச்சம் இருக்கிறது. பிரபாகரன் தலைமையில் அந்தப் போராட்டம் எந்த நேரத்திலும் வெடிக்கலாம். எப்போது எந்தக் காலகட்டத்தில் என்பதை பிரபாகரன் மட்டுமே முடிவு செய்ய முடியும். உற்ற தருணம் நோக்கி அவர் காத்திருக்கிறார். அந்தக் காத்திருப்பு வீண் போகாது!''

சலனமின்றிச் சொல்லி முடிக்கிறார் பழ.நெடுமாறன்!

ஐஸ்வர்யா ராய் படத்தை புறக்கணிப்போம்: அமிதாப் வீட்டு முன்பு நாளை போராட்டம்: இலங்கை செல்ல மறுத்த ரஜினி, கமலுக்கு நன்றி: சீமான்

இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கு ஐஸ்வர்யா ராய் சென்றால் அவரது படங்களை புறக்கணிப்போம் என்றும், அமிதாப் வீட்டு முன்பு நாளை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,
இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா ஜூன் மாதம் நடத்தப்படுவதாக அறிந்தோம். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை நடிகர் அமிதாப்பச்சன் முன்னின்று கவனித்து வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.

அமிதாப்பின் மருமகள் ஐஸ்வர்யாராயும் இந்த விழாவில் பங்கேற்க இருப்பதாக கேள்வியுறுகிறோம். இதற்காக மனவருத்தப்படுகிறோம். தமிழ் ரசிகர்கள் முழுமையாக அவரை நேசிக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் இந்த விழாவில் அவர் பங்கேற்பது தமிழ்க்கலைஞர்களின் உணர்வுகளுக்கு எதிரானது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

விழாவில் பங்கேற்பதை அவர் நிராகரிக்க வேண்டும். தமிழர்கள் மற்றும் தமிழ்க்கலைஞர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இவ்விழாவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

தமிழர்களின், தமிழக்கலைஞர்களின் உணர்வை புரிந்து கொள்ளாமல் அமிதாப், ஐஸ்வர்யா ராய் இருவரும் இவ்விழாவில் பங்கேற்பார்களேயானால் ஐஸ்வர்யா நடித்துள்ள படத்தை ஒட்டுமொத்த தமிழர்களும் புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் ஐஸ்வர்யா ராய் நடித்த படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அவரது படத்தை பார்க்காமல் புறக்கணிப்பார்கள்.

தமிழர்களின் மரணச் செய்தி தினமும் வந்து கொண்டிருக்கின்ற வேளையில் தமிழர்கள் கண்ணீர்க்டலில் மிதக்கும் நேரத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை மகிழ்விக்க இத்தகைய ஒரு விழா நடத்தப்படுவது தேவைதானா என்று அமிதாப் பச்சன் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.

தமிழர்களின் ஆதரவில் வசதி வாய்ப்புகளை தேடிக்கொண்ட ஐஸ்வர்யா ராய் தமிழர்களின் உணர்வுகளுக்கு மாறாக நடந்து கொள்ளக்கூடாது.

எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், இதற்கு முன் உதாரணமாக மும்பையில் உள்ள அமிதாப் வீட்டு முன்பாக நாம் தமிழர் இயக்கம் சார்பில் நாளை காலை முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் மும்பையில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாம் தமிழர் இயக்க தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று கூறியுள்ளார்.

இலங்கை செல்ல மறுத்த ரஜினி, கமலுக்கு நன்றி

தமிழர்கள் கண்ணீர் கடலில் மிதக்க இலங்கையில் ராஜபக்சேவை மகிழ்விக்க சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்துவதா என்று அமிதாப்பச்சனுக்கு இயக்குனர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அமிதாப் அழைப்பை புறக்கணித்த ரஜினி, கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சீமான்.

இதுகுறித்து சீமான் மேலும் கூறியதாவது,

இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா ஜூன் மாதம் நடத்தப்படுவதாக அறிந்தோம். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை நடிகர் அமிதாப்பச்சன் முன்னின்று கவனித்து வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.

இவ்விழாவில் பங்கேற்க கமல், ரஜினி இருவருக்கும் அமிதாப் விடுத்த அழைப்பை அவர்கள் இருவரும் புறக்கணித்துவிட்டதாக செய்தி வருகிறது. இவ்விழாவில் பங்கேற்க மறுத்த அந்த இரு கலைஞர்களுக்குக்கும் அனைத்து தமிழ்க்கலைஞர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்க்கலைஞர்கள் யாரும் இவ்விழாவுக்கு போகக்கூடாது என்று அனைத்து தமிழ்க் கலைஞர்களும் எதிர்பார்க்கிறார்கள். இதே காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாளும் நமக்கு இலங்கையில் இருந்து மரணச் செய்தியாகத்தான் வந்து கொண்டிருந்தன. அங்கு தமிழர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.

சென்ற ஆண்டு இதே நாளில் நடந்த நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவத்தை மறக்கடிக்க திட்டமிட்டு இந்த விழா நடத்தப்படுவதாகவே கருதுகிறேன். இன்றைக்கும் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் முள்வேலிக்கு மத்தியில் கடும் சித்ரவதைக்கு ஆளாகி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

Saturday, April 24, 2010

Senior ex-LTTE cadres under pressure to confess

Colombo Establishment has subjected hundreds of senior Liberation Tigers of Tamil Eelam (LTTE) cadres in its custody to confess to alleged accusations of war crimes, promising that a general amnesty would be granted sooner to those who confess, informed legal sources in Colombo told TamilNet Friday. The move, backed by Indian advice, comes as the Rajapaksa government secured majority of seats in Sri Lankan parliament. Concerned legal sources urged Diaspora Tamils to take meaningful action in arranging legal assistance to the victims through independent and reliable sources without allowing Indian or Colombo backed legal practitioners to victimise the detained cadres.

Sri Lankan officials have approached legal firms and their contacts in certain organisations to provide 'legal assistance' to the family members of the LTTE members in custody by advising them to confess to the alleged charges, being furnished by the Sri Lankan military.

The legal sources further said that there was hardly any evidence in many of the cases and that many of the victims would benefit from not yielding to the pressure being exerted on them if they receive proper legal assistance from independent sources without political influence.

Meanwhile, Malaysia, on Friday claimed for the first time that it had detained several key members of the Liberation Tigers of Tamil Eelam and deported many of them to Sri Lanka between August 2009 and March 2010, New Straits Times reported from Kuala Lumpur

Liberation Tigers’ Ira’naimadu runway used exclusively by Indian Air Force

The runway constructed by Liberation Tigers of Tami Eezham (LTTE) in Ira’naimadu in Ki’linochchi has been handed over to the exclusive use of Indian Air Force (IAF), according to sources close to a section of Sri Lanka Air Force (SLAF) personnel who have expressed their disapproval of this course of action by Sri Lanka government. The area in which this runway is located in Ira’naimadu falls within the High Security Zone (HSZ) and is strictly out of bounds for low ranking SLA personnel, the sources added. IAF officers fly routinely between Tamil Nadu and Ira’naimadu besides training SLAF personnel at I’ra’naimadu, the sources said.

The runway constructed by LTTE in I’a’naimadu in a strategic jungle area in Ki’linochchi had been considered an extraordinary feat by many military analysts.

Recently some persons lost their lives when they were engaged in constructing a communication tower in Ira’naimadu.

It is reliably understood that these men died working on the project where communication towers were to be erected in Kurunakar and Point Pedro in Jaffna peninsula to function along with the communication tower in Ira’naimadu with the aim to develop communication technology and facilities between Tamil Nadu and Ki’linochchi.

Some local communication agencies are also said to be offering their assistance to this project.

So far the uprooted civilians from Vanni had not been permitted to resettle in Ira’naimadu area or most of the area east of A9 road, sources in Vanni said.

புலி உறுப்பினர்களை மலேசியா இலங்கைக்கு நாடு கடத்தியது இப்போது ஒப்புக்கொள்கிறது அந்த நாடு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குப் பின்னர் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனரென அந்நாட்டு அரசு பகிரங்கமாக நேற்று அறிவித்தது.


புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவுக்குப் பின்னர் அந்த இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரையும் தாங்கள் கைது செய்து நாடு கடத்தி உள்ளார்களென மலேசிய உள்துறை அமைச்சர் ஹிஸாமுடீன் குஷெய்ன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஒகஸ்ட் மாதத்துக்கும் மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஏராளமான புலிகளைத் தாங்கள் கைதுசெய்து நாடு கடத்தினர் எனவும், மலேசிய அரசின் இந்நடவடிக்கையை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பெரிதும் பாராட்டினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் அந்த அறிக்கையில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட புலிகள் பற்றிய விவரங்கள் எவையும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அதேநேரம், மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் மேஜர் ஜெனரல் ஜி.வி.டி. யூ. ஏ. பெரேரா உள்துறை அமைச்சரின் இவ்வறிக்கை குறித்து கருத்துக்கூற மறுத்துள்ளார்.

ஆனால் பெயர் குறிப்பிட விரும்பாத மலேசிய உயரதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குக் கருத்துக் கூறுகையில், புலிகளின் முக்கிய பெருந்தலைவர் ஒருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார் என்றார்.

இருப்பினும், அப்புலித் தலைவரின் பெயரைக் குறிப்பிட அவர் மறுத்துவிட்டார்.

புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான கே.பி. எனப்படும் கே. பத்மநாதன் கடந்த ஆகஸ்ட் மாதம் கோலாலம்பூரில் வைத்து கைதுசெய்யப்பட்டு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டாரென நம் பப்படுகின்றது.


http://www.tamilwin.com/

Wednesday, April 21, 2010

Will Sri Lankan Government Release KP?

The Indian Multi Disciplinary Monitoring Agency (MDMA) which is investigating the possible conspiracy behind the assassination of Rajiv Gandhi has recently informed that it has need to investigate KP, the former leader of the Tamil Tiger International chain presently under detention in Sri Lanka


Prior to this, India’s RAW (Reasearch and Analysis Wing- intelligence service) came to Sri Lanka and questioned KP. The latter however during the investigation denied having any involvement in the Gandhi assassination while citing evidence. But, the RAW had not accepted KP’s denial in full, and registered strong protests against some of his statements, sources say.

Now, India’s MDMA has informed Sri Lankan authorities that it has to interrogate KP in the midst of the emergence of two divergent views within the Sri Lankan Terrorist Investigation UNit regarding the action to be instituted against KP: One view favours filing of legal action against KP and producing him before the Court.

The other view is, KP shall be released.

The protagonists of the latter view argue, as KP formed the Tamil Tiger Diaspora for the war, so he should be given the opportunity to induce the Diaspora to come to the path to peace, and their mentality can be changed only by KP.

It is reported that KP has advanced many proposals in regard to roping in the Tamil Tiger Diaspora to the path to peace.

He has advanced these proposals after having discussions with certain representatives of the Tamil political parties in the North- East and those of the Tamil Diaspora .

Moreover, representatives of some Tamil political parties had met KP on several occasions, and the latter is in communication with the Tamil Diaspora too over the phone.

It is learnt that he has put forward proposals for the development of the North –East provinces via the investments of the Tamil Diaspora .

The Government. however has still not decided on the course of action in respect of KP. The Government. entertains apprehensions that KP is not entirely trustworthy and is possibly trying to exploit this opportunity to join hands with the Tamil Tiger Diaspora again.

Incidentally , the popular story that the Tamil Tiger Diaspora which opposed the appointment of KP as the Tamil Tiger leader, gave the tip-off for the arrest of KP is a myth and not the truth. That was a story invented to sow disaffection among the Diaspora.

The Government planned to arrest KP even while Prabhakaran was living. The reason for this is the Government’s perception that KP was seeking to rescue Prabhakaran, and therefore the former should be destroyed before that .

The Government became aware only after the arrest of KP that the latter had planned to dig a tunnel under the sea in order to dispatch Prabhakaran via a Submarine. Prabhakaran was to be fetched to a ship where a helicopter was to land and take off whisking away Prabhakaran.


During the final phase of the war , although the Government tried to arrest KP, that proved futile.

Later, the Govt. succeeded because of KP’s indiscretions and his conduct in neglect of personal security, and it was not because of the Tamil Tiger Diaspora conflicts.

Although there was a proposition during the period of the last Presidential election to release KP and allow him to participate in politics in the North and East , the Govt. was in two minds based on its fear for KP on the one hand and its inclination to release him on the other.

The Indian Intelligence service sees the release of KP in a different light. It is apparent that they are in disfavour of the release of K.P. It is on this account the MDMA has intimated that it requires to question KP while India’s RAW secret service has already once earlier, interrogated him in connection with the Rajiv Gandhi murder.

There are also reports that they are desirous of delving into KP’s Bank accounts. India’s CBI in 2002 had gone to New Zealand and Germany to investigate the Bank account details of KP in those countries, reports say.

Indeed,the CBI has had correspondence and exchanged documents with 23 countries in an effort to get details in connection with KP’s Bank accounts.

The RAW secret service while interrogating KP was only investigating his involvement in the Gandhi murder. Yet , the MDMA is of the view that there could have been a conspiracy behind the Gandhi murder , and KP has to be questioned in that angle.

This conspiracy claim can imply an International conspiracy. Their objective is to investigate deeper as to whether KP was implicated, because at that time he was in charge of the Tamil Tiger Diaspora International chain

http://www.dailymirror.lk/

எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்து இழிவுபடுத்துவதை ஊடகங்கள் கைவிடவேண்டும்

எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்து இழிவுபடுத்துவதை ஊடகங்கள் கைவிடவேண்டும் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை க.கலையன் என்ற பெயரில் எமது தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.

அறிக்கையின் முழுவடிவம்:-


Tuesday, April 20, 2010

India’s Lack of Compassion to Sick and Infirm Mrs Veluppillai Parwathy

The greatest son of ancient India, Gautama Buddha a Hindu ardently preached of Compassion. In essence it meaning is "do to others what you would like to be done to you" and its negative version is “do not do to others what you would not like to be done to you".

Late Jawaharlal Nehru, the first Prime Minister of free India adhered to this principle and espoused the policy of ‘non alignment’. All successors, except the present government of Sonia-Singh, followed the holy principle or the Golden Rule.

This government led by an Italian Roman catholic turned Indian Hindu displayed gross neglect of duty of care to the sick and infirm elderly when Indian immigration officials at Chennai air port deported 81-year-old Mrs. Vallipuram Parvathi on 16 Friday April 2010 when she arrived there by plane from Malaysia. Mrs. Parvathi was the ailing mother of the late LTTE leader Mr. Velupillai Pirapaharan. She travelled from Malaysia to get admitted to a hospital in Chennai for specialist treatment for her numerous ailments one of which was hemiplegia or partial paralysis. The cruel part of this episode is that she was even refused landing permission by airport officials after travelling a long distance by air in her sick condition purportedly with a valid visa issued by the entry clearance officer at the Indian High Commission in Malayasia (Uthayan news).

She was sent back to Malaysia in the same aeroplane. The notion of compassion nurtured and practiced by Lord Buddha, Mahatma Gandhi and Jawaharlal Nehru had gone with the wind. The immigration authorities at the Chennai airport were surprised to see Parvathi, mother of slain LTTE leader Prabakaran, when she landed from Malaysia with a valid six months medical visa at the airport on Friday night. She was accompanied by a woman helper. Instead of taking a humanitarian view of the situation the government officials at the airport took a political view of the situation. www.Colombopage.com reported that Mrs. Vellupillai Parvathi (nee Vallipuram) was considered by India as a threat to law and order situation in the country. The state officials at the air port would not have dealt this unkindest cut of all without consulting higher authorities in the government. They could hide behind law for this cruel behaviour. They could say that Mrs Parwathy’s name was in the black list of persons who were supposed to be security threat to India. Mrs Parwathy and her late husband Veluppillai were put in the security risk list since 2003 on the advice of the then chief minister of Chennai film actress Ms Jayalalitha. The reality of Mrs Parwathy’s condition and situation makes this decision of the government a mockery of Justice and fair play.

Last May, Pirapaharan’s Mother Parwathy and father Mr.Thiruvengadam Velupillai (now deceased), who were living in Vanni and went into IDP camps. From there they were taken to Panagoda military camp and were detained there. Both were denied good medical facilities and were allegedly humiliated while in detention. Subsequently, without any insider knowledge of his situation Mr. Thiruvengadam Velupillai, the father of Mr. Pirapaharan passed away in Sri Lanka Army detention at Panagoda in January this year. This lady also had shock of all these life events which amounted to post traumatic stress disorder. She was a diabetic and had complications from it such as high blood pressure and semi paralysis. No one could expect a security threat from such an invalid woman except of course political ill feeling for not helping a lonely woman to get the required specialist medical care in Chennai. It is a fact that people from countries that are politically in logger head with India such as Pakistan and Bangladesh are visiting India on various errands without being detained or deported as security threat.

Mrs Parwathy stayed in Malaysia for some months without any security risk to that country and the Indian High commission had issued a visa after necessary screening for security threat etc. Then why is this turn around at the air-port? It is second thought for petty political reasons.

This is evidenced by the statement issued by ex Minister Subramaniam Swamy (biracial Brahmin). He misappropriating state power supposed to have declared that India is not a public free Inn (Dharmasala) for every body to come freely and stay and go and that Mrs Parwathy should condemn the killing of Rajiv Gandhi first and thereafter he would think of the possibility of admitting Mrs Parwthy to India. What do you think of this idiotic argument of an ex-minister? It is vanity and conceitedness at its highest. One cannot punish the parents for the wrong doing of their grown up children having a separate life of their own. If Swamy insists on this remedy it will be proxy punishment which is a terrorist act.

What a reasonable democratic government should have done first was to admit Mrs Parwathy to a hospital for necessary treatment on compassionate grounds. If necessary she might have been guarded for 24 hours. If Varatharaja Perumal ex para military leader and chief minister of Northern Province could be accommodated in India for years on at Indian Government expence why cannot the Indians reduce the security threat of a sickly 81 year old woman by putting guards and that for a short period till she completed her treatment?

The world has come to know the hypocrisy of the present Indian politicians in power. They learnt a bad lesson during the last war in Sri-lanka due to faulty advice from Malayalee Narayanan and Siva Shankar Menon. Their wrong advices gave away sri-Lanka to Chinese dominance and influence to the exclusion of India though a super power in the region.

This time round India had made a big mistake in refusing to allow an octogenarian sick person Mrs Parwathy to take medical treatment on humanitarian grounds. UN, UNHCR and Amnesty International should take this matter up at international level.

Tamil organisations are organising protests marches and fasting to arouse the consciences of the world population because this issue affects the aged and the infirm not only in India but elsewhere in the world.

Albert Einstein on elderly "A human being is a part of the whole called by us universe, a part limited in time and space. He experiences himself, his thoughts and feeling as something separated from the rest, a kind of optical delusion of his consciousness. This delusion is a kind of prison for us, restricting us to our personal desires and to affection for a few persons nearest to us. Our task must be to free ourselves from this prison by widening our circle of compassion to embrace all living creatures and the whole of nature in its beauty."

Professor Luke Gormally said in September 1998 “the elderly are our ancestors, most of them parents of one or more who follow them. Children should honour their parents. Many are no longer disposed to do so. Our generation is in danger of conspiring, or colluding by indifference, in the criminal neglect and even killing of many of the elderly. We need to do more than name this conspiracy for what it is. We need to redeem our times. In this sense we are the ones who need to love our elders.

“we need to love the frail elderly because we need to relearn the conditions of accepting debility and dependence as ways to spiritual transformation”.

Delhi Chief Minister Sheila Dikshit on 16 Friday April 2010 while inaugurating a workshop-cum-consultative meet on 'empowering elderly people'said her government is committed to providing all possible help to the senior citizens in the city. She further added "The elders must be given due respect in society. Our government is committed to provide all possible help to them by sincerely implementing various schemes meant for them".

The care of the elderly becomes more important in view of the demography in India. In 2001 there were some 77 million people in India aged over 60. By 2013 that figure is expected to have increased to 100 million. 90% of older persons have no social security at age 60. 30% of the elderly live below the poverty line and a further 33% live just above it. 55% of women over 60 are widows, many of them with no support whatsoever.

We must learn to respect the elderly rather than taking revenge on them. This is important in view of the demographic trend. Mahatma Gandhi said “You must be the change you wish to see in the world."


*The Golden Rule is an ethical code that states one has a right to just treatment, and a responsibility to ensure justice for others. It is also called the ethic of reciprocity. It is arguably the most essential basis for the modern concept of human rights, though it has its critics. A key element of the golden rule is that a person attempting to live by this rule treats all people, not just members of his or her in-group, with consideration. It is derived from the philosophies of ancient India, Greece, Judea and China.

இனி எங்கள் அகராதியில் ஆயுதமே இருக்காது" என்ற ஜூனியர் விகடன் செய்திக்கு உருத்திரகுமாரன் மறுப்பு

எதிர்வரும் காலத்தில் ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஆயுதப்போரட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என நான் தெரிவித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளில் உண்மையில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணைப்பாளர் திரு வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இனி எங்கள் அகராதியில் ஆயுதமே இருக்காது என திரு உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளதாக இந்திய சஞ்சிகையான ஜுனியர் விகடனில் வெளிவந்த நேர்காணல் தொடர்பில் உருத்திரகுமாரன் மேற்கண்டவாறு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தாயகத்தில் ஆயுதப்போராட்டம் வெடிக்குமா இல்லையா என்பதை அங்கு தோற்றுவிக்கப்படும் சூழ்நிலைகளே தீர்மானிக்கும். அதனை நாம் எதிர்வுகூறமுடியாது. ஆனால் அனைத்துலகத்தில் முன்னெடுக்கப்படும் எமது நடவடிக்கைகள் எந்த விதத்திலும் வன்முறைகளை கொண்டதாக அமையாது. அதனை தான் நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு உரிய அரசியல் தீர்வை இலங்கை அரசு முன்வைக்காது விட்டால் அங்கு ஒரு ஆயுதப்போராட்டம் மீண்டும் வெடிக்கலாம் என மேற்குலக நாடுகள் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருவதையும் நாம் இங்கு கவனத்தில் எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Source : www.tamilwin.com