Wednesday, March 17, 2010

ஈழத்தின் அடர்ந்த காடுகளுக்குள் இராணுவம் புலிகள் மோதல்

ஈழத்தின் வன்னி, கிழக்கு அடர்ந்த காடுகளுக்குள் "தேடி அழி(Search and destroy)” நடவடிக்கைக்குச் சென்ற சிங்கள கமாண்டோ சிறப்பணிகள் சில கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பிழந்ததால் அதிர்ச்சியில் இலங்கை அரசு உள்ளதாகக் கூறப்படுகிறது. இழப்பின் ஆத்திரத்தில் மீள்குடியேறிய மக்கள் மீது மீண்டும் இராணுவம் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபடுவதாகத் தகவல்.

இந்தப் புதிய தாக்குதல்களுக்கு 'பண்டாரவன்னியன் நடவடிக்கை (ஒப்பரேஷன் பண்டாரவன்னியன்)' எனப் புலிகள் குறியிட்டுள்ளதாக இரகசியச் செய்திகள் வெளியில் கசிந்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த இராணுவம் புகழ்பெற்ற தமிழரசன் பண்டாரவன்னியனின் நினைவுக்கல்லை அண்மையில் உடைத்தது. இதற்கு முன்னரும் புலிகள் இன்னுமோர் புகழ்பெற்ற ஈழத்து அரசன் எல்லாளன் பெயரில் அநுராதபுர விமானத்தளத்தைத் தாக்கியழித்து அதற்கு 'எல்லாளன் நடவடிக்கை(ஓபரேஷன் எல்லாளன்)' எனக் குறியிட்டிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஓராண்டுக்கு முன் புலிகளை முற்றாக அழித்து விட்டதாகப் பறைசாற்றிய அரசு வரும் சித்திரைப் பொதுத்தேர்தலுக்கு முன்னால் பாரிய தாக்குதல் நடைபெறுவதைத் தடுக்க இந்தியா, சீனா, ரஸ்யா, ஈரான், பாகிஸ்தான் நாடுகளின் ஆயுத தளபாட, தொழில்நுட்ப உதவிகளை நாடியுள்ளது.

பிரபாகரன் கொல்லப்படவில்லை

பிரபாகரன் கொல்லப்படவில்லை என்பதை மறைமுகமாக சிங்கள அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் சில தமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அரசு இது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

இந்திய அரசுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளோம். இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ் உடனான சந்திப்பின்போது எமது இந்தக் கவலையைத் தெரிவித்தோம்.

இலங்கை தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்கும். இறைமையைக் காப்பாற்றுவதற்காக பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுப்போம்.

நிருபமா ராவ் உடனான சந்திப்பின் போது, பயங்கரவாதம் குறித்தும் சர்வதேச ரீதியிலான விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் குறித்தும் நாங்கள் கொண்டுள்ள கவலையை அவருக்குத் தெரியப்படுத்தினோம். என அவர் குறிப்பிட்டுள்ளார்

Minister Bogollagama also informed Rao that Sri Lanka would continue to be vigilant and engage in countering measures against terrorism to protect the territorial integrity and sovereignty of the country.
“We discussed terrorism and the continuous need for us to be vigilant in counter terrorism measures. I shared with the Indian Foreign Secretary our concerns in the international front in the lines on which some of the umbrella organizations of the LTTE are still trying to trace their head,” Minister Bogollagama told journalists.

மேலும் பழ. நெடுமாறன் அவர்கள் பிரபா அடுத்த கட்டநடவடிக்கைகளுக்கு தயார் எனவும் ஒட்டுமொத்த உலகத்தமிரையும் தமக்குப் பின்னால் அணிதிரளுமாறு விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுத்துறையினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment